Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா.. காங். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஹிஸ்டரிய பாருங்க! இத்தனை கட்சிகளில் இருந்துள்ளாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் செல்வப்பெருந்தகை. செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சிக்கு முன்பாக, புரட்சி பாரதம், புதிய தமிழகம், விசிக, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளில் பணியாற்றியவர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிமங்கலம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வப்பெருந்தகை. திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்பையும், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏவும் படித்தவர். பின்னர், அரசியலில் இயங்கத் தொடங்கினார்.

Who is Selvaperunthagai who was appointed as TN Congress committee president


செல்வப்பெருந்தகை, தனது அரசியல் வாழ்க்கையை பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சியில் இருந்து தொடங்கினார். பின்னர், புரட்சி பாரதம் கட்சியில் இருந்து இருந்து விலகி டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் இணைத்தார். கிருஷ்ணசாமி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியில் இருந்தும் விலகினார் செல்வப்பெருந்தகை.

பின்னர் தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். விசிக சார்பாக 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார் செல்வப்பெருந்தகை. அதன் பின்பு திருமாவளவன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் மாநில தலைவராக செல்வப்பெருந்தகைக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

சுமார் 2 ஆண்டுகள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டு வந்த செல்வப்பெருந்தகை அதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் செல்வப்பெருந்தகை.

2011 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மீண்டும் 2016 சட்டசபை தேர்தல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.

அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக சட்டசபையின் பொதுக் கணக்குக் குழு தலைவராக முதல்வர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு அனைத்துக் கட்சி எஸ்.சி/எஸ் டி நலக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார் செல்வப்பெருந்தகை. இந்நிலையில் தான், கேஎஸ் அழகிரிக்கு பதிலாக, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் செல்வப்பெருந்தகை.

தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கே.எஸ்.அழகிரி தொடர்ந்து வரும் நிலையில், அவர் மாற்றப்பட உள்ளதாக கடந்த பல மாதங்களாகவே கூறப்பட்டு வந்தது. காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை பிடிக்க பல முன்னணி தலைவர்களிடையே போட்டி இருந்து வந்த சூழலில், தற்போது மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் செல்வப்பெருந்தகை.

செல்வப்பெருந்தகை இதுவரை வகித்து வந்த சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, எஸ். ராஜேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பல்வேறு பணிகள் உள்ள நிலையில், திடீரென காங்கிரஸ் மாநில தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+