Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினின் "ரைட் ஹேண்ட்".. பிடிஆரே பாராட்டியவர்! புதிய தலைமை செயலாளரான முருகானந்தம்! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக ஐஏஎஸ் முருகானந்தம் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தேர்விற்கான காரணம் என்ன? யார் இவர்? பின்னணியில் என்ன நடந்தது என்று இங்கே பார்க்கலாம்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராக பணியாற்றி வந்தார். சிவ்தாஸ் மீனா ஒரு காலத்தில் ஜெயலலிதாவிற்கு மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக பார்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1989ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். 2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் அவருக்கு மாஸ்டர்மைண்டாக இருந்த 4 செயலாளர்களில் ஒருவராக இவர் இருந்தவர்.

shivdas meena tamil nadu chief secretary

அதன்பின் எடப்பாடி முதல்வரான போதும் இவரை அதேபோல் செயலாளர் பொறுப்பில் நியமிக்க நினைத்தார். ஆனால் அதற்குள் இவரை டெல்லி மத்திய அரசு பணிக்கு அழைத்தது. ஆனால் இவரை தமிழ்நாட்டிலேயே வைத்துக்கொள்ள எடப்பாடி தீவிரமாக முயன்று வந்தார். சட்டமன்ற கூட்டத்திற்கு பின்னர் அனுப்பி வைப்பதாக கூட கூறி சில நாட்கள் கூடுதலாக தமிழ்நாட்டில் வைத்து இருந்தார்.

ஆனால் வேறு வழியின்றி சிவ்தாஸ் கடைசியில் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். இடையில் பல முறை எடப்பாடி முயன்றும் சிவ்தாஸ் மீனாவை மாநில பணிக்கு அழைக்க முடியவில்லை. இதையடுத்து ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சிவ்தாஸ் மீனாவை மாநில பணிக்கு அழைத்து வந்து.. தற்போது தலைமை செயலாளரும் ஆக்கி உள்ளார். இவர் ஸ்டாலினின் குட் புக்கிலும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றம் ஏன்?: தற்போது தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முருகானந்தம் ஐஏஎஸ் தலைமை செயலாளர் ஆகி உள்ளார்.

இவர் தலைமை செயலாளர் பதவியில் சுறுசுறுப்பாக இல்லை என்ற புகார்கள் வைக்கப்படுகின்றன. அதிகாரிகளை பெரிதாக கட்டுப்படுத்தவில்லை, திமுகவின் வேகத்திற்கு பெரிதாக ஈடுகொடுக்கவில்லை, சில டாப் தரப்புடன் மோதல் உள்ளது என்றெல்லாம் கூறப்படுகிறது. அதனால்தான் தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்கிறார்கள். ஆனாலும் அதிகாரபூர்வ காரணம் இன்னும் வெளியாகவில்லை.

யார் அடுத்து?: சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலாளராக முதலமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் தலைமைச் செயலாளராக தேர்வாகி உள்ளார்..

முருகானந்தம் சென்னைக்காரர்.. ஸ்டாலினின் குட் புக்கில் இருப்பவர். இவர் சிறப்பாக செயல்படுவதாக சமீபத்தில் அமைச்சர் பிடிஆர் கூட பாராட்டி இருந்தார். முன்பு முதல்வரின் தனி செயலாளர் பொறுப்பில் உதயசந்திரன் இருந்தார்.. உதயசந்திரன் அதன்பின் நிதித்துறை செயலாளர் பொறுப்பிற்கு மாற்றப்பட்டு அவரின் இடத்திற்கு முருகானந்தம் ஐஏஎஸ்ஸை கொண்டு வந்தனர்.

முருகானந்தம் ஐஏஎஸ் 1991 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பிஜி கணினி அறிவியல், ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ படிப்புகளை இவர் படித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார். அதோடு பிடிஆர் நிதி அமைச்சராக இருந்த போது அவருக்கு கீழ் இவர் செயலாளராக இருந்தார். கிட்டத்தட்ட இவர்தான் பிடிஆரின் ரைட் ஹேண்ட். பட்ஜெட்டை உருவாக்கியதில் கடந்த 2 வருடங்களில் இவரின் பங்கு முக்கியமாக கருதப்பட்டது.

உதயநிதி: பிடிஆரே இவரை அழைத்து பாராட்டும் அளவிற்கு இவரின் பணி சிறப்பாக இருந்தது. இந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினின் தனி செயலாளர் ஆக உள்ளார். விரைவில் தலைமை செயலாளர் ஆக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை மாற்றும், ஸ்டாலின் வெளிநாடு பயணம், உதயநிதி ப்ரோமோஷன் உள்ளிட்ட பல விஷயங்கள் கிசுகிசுக்கப்படுவதால்.. முருகானந்தன் சார்ஜ் எடுப்பது கவனம் பெற்றுள்ளது/.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+