சைலண்ட் ஆக்ஷனில் திமுக.. ஸ்பீடு எடுத்த உட்கட்சி தேர்தல்.. சென்னை வட்ட செயலாளர் பதவிக்கு செம போட்டி
சென்னை திமுகவில் வட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது
சென்னை: சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிற திமுக வட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் வெடித்து வரும்நிலையில், மற்றொருபுறம் திமுக சைலண்ட்டாக தன்னுடைய உட்கட்சி தேர்தலை விறுவிறுப்பாக நடத்தி கொண்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது... பிறகு பேரூர் கழகம், ஒன்றிய கழகங்களுக்கும் தேர்தலும் முடிந்துவிட்டது...

விருகம்பாக்கம்
இப்போது மாநகராட்சி பகுதிகளில் உள்ள பகுதி கழகங்களுக்கு தேர்தல் நடந்து வருகிறது... இதில், சென்னையில் வட்ட கழக செயலாளர் பதவிக்கு நேற்று முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது... சென்னை தெற்கு மாவட்டத்தை பொறுத்தவரை, மொத்தம் 82 வட்டச்செயலாளர்கள் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.. இதில் மதுரவாயல் தொகுதியில் நேற்று தேர்தல் முடிந்து விட்டது. இன்று சோழிங்கநல்லூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது... அதேபோல, விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள 13 வட்டச்செயலாளர் பதவிக்கு 8-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

மயிலாப்பூர்
தெற்கு மாவட்டத்தில் 9-ந் தேதி வரை தேர்தல் நடக்கும் என்று மாவட்ட செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.. தி.நகர் தொகுதியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 14 வட்ட செயலாளர் பதவிக்கு நாளைய தினம் தேர்தல் நடக்கிறது.. மயிலாப்பூர் தொகுதிக்கு 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது.. அண்ணாநகரில் உள்ள 14 வட்டத்துக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது.. ஆயிரம் விளக்கு தொகுதியில் நாளையும், சேப்பாக்கம் தொகுதிக்கு நாளை மறுநாளும் தேர்தல் நடைபெறுவதாக மாவட்டச்பொறுப்பாளர் சிற்றரசு தெரிவித்துள்ளார்.

பெரிய வார்டு
சென்னை கிழக்கு மாவட்டத்தை பொறுத்தவரை, அம்பத்தூர் தொகுதியில் உள்ள 15 வட்ட செயலாளர் பதவிக்கும் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.. இங்கு 6-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே மாவட்ட செயலாளரும், இந்து அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு அறிவுறுத்தியிருந்தார்.. ஒரு வார்டுக்கு 2 வட்ட செயலாளர் பதவி வரும் வகையில் பிரிக்கப்பட்டு உள்ளது.. ஒருவேளை பெரிய வார்டாக இருந்தால் 3 வட்டச் செயலாளர் என்ற ரீதியில் பதவி பிரிக்கப்பட்டுள்ளது.

முட்டி மோதுகிறார்கள்
வட்ட செயலாளர் பதவி என்பது, கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும்.. கட்சியின் கூட்டங்களை நடத்துவது முதல், அதற்கான ஏற்பாடுகள் செய்வது வரை அனைத்திலுமே வட்டசெயலாளர்கள் தவிர்க்க முடியாதவர்கள்.. பலம்பொருந்திய இந்த பதவியை பெறுவதற்கு எப்போதுமே, திமுக, அதிமுகவில் கடும் போட்டி இருக்கும்.. அந்தவகையில் திமுகவில் இப்போதும் இந்த போட்டிக்கு முட்டிக் கொண்டு இருக்கிறார்கள்..
Recommended Video

கடும் போட்டி
அதாவது ஒரு வட்ட செயலாளர் பதவியை 10 பேர் வரை கேட்கிறார்களாம்.. எனவே, தேர்தல் நடத்தாமல் சமரசம் செய்து ஆட்களை நியமிக்க வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டதால், அனைவரையும் சமரசம் செய்து, அதன்பிறகு ஒருவரை நியமிக்கின்றனர்... வட்ட செயலாளர் பதவி தேர்தல்கள் 9-ந் தேதியுடன் முடிந்த பிறகு, பகுதி செயலாளர் தேர்தல் சென்னையில் நடத்தப்படும் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications