யாருக்கா இந்த அறிவாளி?... இந்த கொசு தொல்லை தாங்க முடியல.. தமிழிசைக்கு உதயநிதி முன்வைத்த கேள்வி
சென்னை: யாருக்கா இந்த அறிவாளி, இந்த கொசு தொல்லை தாங்க முடியல என பாஜக மாநில தலைவர் தமிழிசைக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தலைவர்களின் வாரிசுகள் அக்கட்சியில் பதவி வகிப்பதை குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த பாஜகவின் மாநில இளைஞர் அணி துறைத் தலைவர் எஸ்.ஜி. சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்திருந்தார்.
அதில் அவர் கூறுகையில் பாஜகவில் உள்ளவர்கள் எந்த வித பரிந்துரையும் இன்றி தலைவர்களானவர்கள். எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களும் அப்படிதான்.

கட்டுப்படுத்தவில்லை
கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி மாதிரியோ ராஜீவ், சோனியா, ராகுல் மாதிரியோ குடும்பத்தினர் வந்து பாஜகவை கட்டுப்படுத்தவில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

பதிலடி
திமுக அறக்கட்டளையின் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி கோடான கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறார். அவரை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இந்த குற்றச்சாட்டு புதியதுதான் என சூர்யா தெரிவித்திருந்தார்.

மோசமான தண்டனை
இதற்கு உதயநிதி பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் திமுக அறக்கட்டளையின் அறங்காவலர் என நீங்கள் நிரூபித்துவிட்டால் நான் உங்கள் மோடியின் முன்னிலையில் பாஜகவில் சேர்வது என்ற கடுமையான, மோசமான தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன் என உதயநிதி குறிப்பிட்டிருந்தார்.

சளைக்காமல்
இதற்கு பதிலளித்த சூர்யா, நீங்கள் நிர்வாக மேலாண்மை இயக்குநராக இருந்தால் முரசொலி அறக்கட்டளையின் பைலாவை படித்து காண்பிக்க முடியுமா என கேட்டிருந்தார். இதற்கும் உதயநிதி சளைக்காமல் பதிலளித்திருந்தார்.
|
பைலா
உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் சூர்யா உங்களுக்கு நிர்வாகத்திற்கும் அறங்காவலருக்கும் வித்தியாசம் தெரியவில்லை. முரசொலி அறக்கட்டளையின் பைலாவை படிக்க நீங்கள் எப்போதும் வேண்டுமானாலும் வரலாம். நீங்கள் மட்டுமில்லை, யார் வேண்டுமானாலும் வரலாம்.

கொசுத் தொல்லை
இனி உங்களுடைய அர்த்தமற்ற கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன். தமிழிசை அக்கா யாருக்கா இந்த அறிவாளி ? தயவு செய்து சொல்லுங்கள்! இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியல என கிண்டலாக பதில் அளித்திருந்தார் உதயநிதி.












Click it and Unblock the Notifications