"கருணாநிதி பற்றி கவலைப்படலையே ஸ்டாலின்".. மோடிக்கு அழகிரி கடிதம் எழுதியதன் பின்னணி இதுதான்!
Recommended Video

சென்னை: பிரதமர் மோடிக்கு திடீரென மு.க.அழகிரி கடிதம் எழுதியதன் பின்னணி குறித்துத் தெரிய வந்துள்ளது.
திமுகவில் இணைவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டும், ஸ்டாலின் தன்னை இணைத்துக்கொள்ளாமல் இழுத்தடிப்பதால் மு.க.அழகிரி தம்பி மீது உஷ்ணமாக இருப்பது ஊரறிந்த விஷயம்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவுக்காக மதுரை வந்திருந்த பிரதமர் மோடியுடன் மு.க.அழகிரியை சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் தமிழக பாஜக தரப்பில் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அழகிரி அந்த முயற்சிக்கு பிடிகொடுக்காமல் மோடியை சந்திக்காமல் நழுவிக்கொண்டார்.

சென்டிரலுக்கு எம்ஜிஆர் பெயர்
இதனிடையே நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்துக்காக சென்னை வந்திருந்த மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்.பெயர் சூட்டினார். பெயர் சூட்டிவிட்டு மோடி சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லியில் இறங்குவதற்குள் மு.க.அழகிரி சுடச்சுட கடிதம் ஒன்றை தயார் செய்து அனுப்பி வைத்தார்.

பாராட்டிய அழகிரி
அதில், சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர்.பெயர் வைத்ததற்கு நன்றி என்றும், எழும்பூர் ரயில் நிலையத்துக்கு மறைந்த தலைவர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

திடீர் கடிதம் ஏன்
திடீர் கடிதம் பற்றி அழகிரி ஆதரவு வட்டாரத்தில் விசாரித்த போது, கருணாநிதிக்கு புகழ் சேர்க்கும் வகையில் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அழகிரி ரொம்ப நாட்களாகவே ஆதங்கத்தில் இருந்து வந்ததாராம். இ

ஸ்டாலின் பேச்சு
இதனிடையே, தென்மண்டல மாநாடு என்ற பெயரில் ஸ்டாலின் தன்னை சீண்டியதையும் அழகிரியால் தாங்கிக்கொள்ள முடியவில்லையாம். நேற்று விருதுநகரில் ஸ்டாலின் முழங்கியதை நீர்த்துப்போகச்செய்ய வேண்டும் என்பதற்காகவும், கருணாநிதிக்கு புகழ் சேர்க்கும் காரியங்களில் தனக்கு மிஞ்சி யாரும் இல்லை என்பதை திமுக தொண்டர்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காகவும், டெல்லிக்கு நேற்று அவசர ஓலை அனுப்பினாராம் அழகிரி.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications