Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரம்பமே இப்படியா.. சென்னைக்கு வந்த புதிய வந்தே பாரத் ரயில்.. ஆனால் அடுத்து நடந்த சம்பவம்.. அட போங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று சென்னைக்கு இரண்டு வந்தே பாரத் சேவைகள் வழங்கப்பட்டன. விஜயவாடா மற்றும் சென்னை , திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட உள்ளன. இந்த நிலையில்தான் இன்று நடந்த சம்பவம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது மன் கி பாத் உரைக்குப் பின் ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடங்கி வைத்தார். இதில் சென்னை - விஜயவாடா ரயிலும் அடங்கும். ஒன்பது ரயில்கள் ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் விரைவான இணைப்பை வழங்கும்.

 Why are people not giving much importance to the Chennai - Vijayawada Vande Bharat train?

புதிய வந்தே பாரத் ரயில்கள் உதய்பூர் - ஜெய்ப்பூர் இடையே இயக்கப்படும்; திருநெல்வேலி-மதுரை - சென்னை; ஹைதராபாத் - பெங்களூரு; விஜயவாடா - சென்னை (ரேணிகுண்டா வழியாக); பாட்னா - ஹவுரா; காசர்கோடு - திருவனந்தபுரம்; ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி; ராஞ்சி - ஹவுரா; மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் இயங்கும்.

திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இரண்டு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை தற்போது 11-12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரத்திற்கும் குறைவாகக் கொண்டு வரும். அதே வேளையில், சென்னை மற்றும் விஜயவாடா இடையே புதிய வந்தே பாரத் நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 6. 40 நிமிடங்கள்.மணிநேரமாகக் குறைக்கும்.

விஜயவாடா ரயில்; விஜயவாடா மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரேணிகுண்டா வழியாக இயக்கப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இது ஆறு மணி 40 நிமிடங்களில் தூரத்தை கடக்கும். பிரதமர் மோடி முதல் பயணத்தின் தொடக்கத்திற்குப் பிறகு, ஆந்திர பிரதேச ஆளுநர் எஸ். அப்துல் நசீர் மற்றும் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி விஜயவாடா ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே (எஸ்சிஆர்) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிறுத்தங்கள்: ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல் மற்றும் தெனாலி ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

அதிர்ச்சி சம்பவம்: ஆனால் இந்த வந்தே பாரத் ரயிலுக்கு பெரிய வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது. மக்கள் பெரிதாக இதில் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இந்த ரூட் பெரிதாக மக்கள் அதிகம் செல்லும் ரூட் கிடையாது. அதோடு தினசரி பயணிகள் எண்ணிக்கையும் இங்கே குறைவுதான். இந்த நிலையில்தான் இந்த ரூட்டில் பயணம் செய்ய வந்தே பாரத் புக்கிங்கும் குறைவாகவே உள்ளதாம். முதல் 3 நாட்களுக்கு புக்கிங் முழுமையாக நிரம்பி உள்ளது.

ஆனால் அடுத்தடுத்த நாட்களுக்கு பெரிதாக புக்கிங் நடக்கவில்லை என்கிறார்கள். சென்னைக்கு வந்த இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களில் நெல்லை ரயில் ஹிட் அடித்துள்ள நிலையில் இந்த ரயில் பிளாப் ஆகி உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். இதை நீட்டிக்கும் பட்சத்தில் பயணிகளின் ஆர்வம் இந்த ரூட்டில் அதிகரிக்கலாம்.

திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:
சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு இது இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரயில் 652.49 கிமீ தூரத்தை சராசரியாக 83.30 கிமீ வேகத்தில் கடக்க 7 மணி நேரம் 50 நிமிடங்கள் எடுக்கும். வந்தே பாரத் ரயில் திருநெல்வேலியிலிருந்து சென்னை எழும்பூர் நோக்கி மதியம் 12.30 மணிக்கு தனது முதல் பயணத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

நிறுத்தங்கள்: சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்று திருநெல்வேலி அடையும்.
கலவை: தற்போதைய நிலையில், ரயிலில் எட்டு பெட்டிகள் இருக்கும். எதிர்காலத்தில் தேவையின் அடிப்படையில், ரயில்வே அதை அதிகரிக்கலாம்.
அட்டவணை: செவ்வாய்க்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் ரயில் இயக்கப்படும்.

நேரங்கள்:
திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். விருதுநகர் (காலை 7.13), மதுரை (காலை 7.50), திண்டுக்கல் (காலை 8.40), திருச்சி (காலை 9.50) , தஞ்சாவூர் (10.10) மற்றும் விழுப்புரம் (காலை 11.54) மற்றும் தாம்பரம் (மதியம் 1.13 மணி) ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும். மற்றும் 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இது தாம்பரம் (மதியம் 3.18 மணி), விழுப்புரம் (மாலை 4.39 மணி), தஞ்சாவூர் (6.00), திருச்சி (மாலை 6.40 மணி), திண்டுக்கல் (இரவு 7.56 மணி), மதுரை (இரவு 8.40 மணி), விருதுநகர் (இரவு 9.13 மணி) ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+