Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவரை ஏன் டீமில் வச்சு இருக்கீங்க! "சிங்கத்தை" அசிங்கப்படுத்திய ரோஹித்? புவி போதுமா? குமுறும் ஃபேன்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அணியில் இளம் வீரர் ஒருவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்திய அணியில் பொதுவாக ஒரு கலாச்சாரம் இருக்கிறது. அணி தேர்வில் கேப்டன், கோச் முடிவு எடுக்க முடியாது.

தேர்வு வாரியம்தான் அணி தேர்வில் முடிவு எடுக்க முடியும். அணி தேர்வு செய்யும் வீரர்கள் 15 பேரில் 11 பேரை தேர்வு செய்யும் உரிமை மட்டுமே கேப்டன், கோச்சுக்கு இருக்கிறது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்திய அணி சமீபமாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்விகளை தழுவ இது முக்கிய காரணம் ஆகும். உதாரணமாக தேர்வு குழு செய்த தவறால் விஜய் சங்கர் போன்ற வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பல திறமையான வீரர்கள் தேர்வுக்குழுவின் ஈகோ காரணமாக அணியில் இடம்பெறுவதே இல்லை. அப்படியே 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைத்தாலும் சில குறிப்பிட்ட வீரர்களுடன் கேப்டன், பயிற்சியாளருக்கு செட்டாகவில்லை என்றால் அவர்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

 இந்திய அணி

இந்திய அணி

அப்படித்தான் இந்திய அணியில் தீபக் சாஹரை தொடர்ந்து ஒதுக்கி வருகின்றனர். தீபக் சாகர் சிறந்த ஸ்விங் பவுலர். பவர் பிளேவில் நன்றாக பவுலிங் செய்வார். புவனேஷ்வர் குமாருக்கு இணையாக பவுலிங் செய்வார். இப்போது புவனேஷ்வர் குமார் இருக்கும் பார்மிற்கு பார்த்தால் அவரை விட நன்றாகவே இவர் பவுலிங் செய்வார். பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கும் இவர் நன்றாக செய்ய கூடியவர்.

 தீபக் சாஹர்

தீபக் சாஹர்

சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். அதேபோல் இலங்கைக்கு எதிரான டி 20 தொடங்கி பல தொடர்களில் இவரின் பேட்டிங் மிக சிறப்பாக இருந்துள்ளது. இந்திய அணிக்காக சில மேட்ச் வின்னிங் பேட்டிங் ஆட்டங்களை மேற்கொண்டு சாஹர் இருக்கிறார். இருந்தும் அவருக்கு இந்திய அணியில் பெரிய தொடர்களில் வாய்ப்பு வழங்கப்படுவதே இல்லை. கடந்த ஆசிய கோப்பை தொடரில் இவர் ஆடும் அணியில் எடுக்கப்படவில்லை.

 புவனேஷ்வர் குமார்

புவனேஷ்வர் குமார்

புவனேஷ்வர் குமார் மோசமாக ஆடியும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய தொடரிலும் கூட ஷமிக்கு பதிலாக வந்த உமேஷ் யாதாவிற்கு வாய்ப்பு கொடுத்தனர். உமேஷ் யாதவ் டெஸ்ட் பவுலர். அவர் நன்றாக டி 20 போட்டிகளில் ஆடியதே இல்லை. அவருக்கு வாய்ப்பு கொடுத்த ரோஹித் "சிஎஸ்கே" சிங்கங்களில் ஒருவரான தீபக் சாஹருக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை. இத்தனைக்கும் இந்திய பவுலிங் மோசமாக இருந்தது.

 ஹர்ஷல் பட்டேல்

ஹர்ஷல் பட்டேல்

ஹர்ஷல் பட்டேல் காயத்தில் இருந்து இப்போதுதான் மீண்டு வந்துள்ளார். அவருக்கு கிடைக்கும் வாய்ப்பு சாஹருக்கு கிடைப்பது இல்லை. இதைத்தான் ரசிகர்களும் விமர்சனம் செய்து வருகிறார்கள். சாஹர் மேட்ச் வின்னர் என்பதை நிரூபித்து இருக்கிறார். பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுப்பார். அப்படி இருக்கும் போது அவரை தொடர்ந்து ஓரம்கட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். புவனேஷ்வர்குமார் இல்லாத நிலையில் இன்றைய போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+