விழுப்புரத்தில் தோல்வி அடைந்த சிவி சண்முகம்.. தப்புக் கணக்கு போட்டதால் வந்த வினை.. பரபரப்பு தகவல்கள்
சென்னை: சட்டத் துறை அமைச்சராக இருந்த சிவி சண்முகம் விழுப்புரம் படுதோல்வியை சந்தித்ததன் பின்னணி என்ன?
ஜெயலலிதா இருந்த போது பல்வேறு புகார்களின் அடிப்படையில் சிவ சண்முகத்தின் அமைச்சர் பதவி, மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகள் பறிக்கப்பட்டன. இதையடுத்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக வலம் வந்தார்.
சட்டத் துறை என்ற முக்கிய இலாகாவை கையில் வைத்திருந்த சிவி சண்முகம் கடந்த 2011 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் 12,097 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

வாக்குகள் வித்தியாசம்
தொடர்ந்து 2016இல் சட்டசபைத் தேர்தலில் சட்டத் துறை அமைச்சராக இருந்தார். தற்போது 3ஆவது முறை அதே தொகுதியில் போட்டியிட்ட சிவி சண்முகம் திமுக வேட்பாளரிடம் 14,867 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டார்.

அதிருப்தி
அதிமுகவின் மூத்த, முக்கிய தலைவர்களில் ஒருவர் சிவி சண்முகம். இவரது பதவி பறிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. இரு முறை விழுப்புரத்தில் வெற்றி பெற்றும் மாவட்டத்தில் சட்டக் கல்லூரியை கொண்டு வந்ததை தவிர வேறு எந்த நலனையும் செய்யாததால் மக்கள் அவர் மீது அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

பாமக
விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் இருந்த போதும் அமைச்சராக இருந்த இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள். மேலும் இவர் ஒரு தப்புக் கணக்கும் போட்டுவிட்டார் என்கிறார்கள். அதாவது 2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட பாமகவுக்கு 37 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன.

வன்னியர்கள்
தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் வன்னியர்கள் வாக்குகள் அனைத்தும் தமக்கு கிடைத்துவிடும் என நம்பியிருந்தார். ஆனால் அது கிடைக்கவில்லை. மேலும் கட்சி நிர்வாகிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே இவர் தோற்க அவரது சொந்த கட்சி நிர்வாகிகளும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
-
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக












Click it and Unblock the Notifications