Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியை வரவேற்க எப்போதும் செல்லும் ஸ்டாலின்.. இந்த முறை செல்லாதது ஏன்? அடடா இப்படி ஒரு காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்திற்கு செல்லவில்லை. இதற்கு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும்நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு மீண்டும் மீண்டும் பயணம் மேற்கொள்ள உள்ளார். பொதுவாக தேர்தல் காலங்களில் இப்படி பல்வேறு பொதுத்திட்டங்களை தொடங்கி வைக்க மோடி பயணம் மேற்கொள்வது வழக்கம்

Why did CM M K Stalin did not go to airport to welcome PM Narendra Modi

அதேபோல் இந்த முறையும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். பாஜக கூட்டம் மற்றும் சில பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று தமிழ்நாடுவந்தார். கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக மோடி தமிழ்நாடு வருகிறார். .

நேற்று வருகை; பிற்பகல் 3.30 மணிக்கு கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு சென்னை வரும் மோடி பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டார். மோடியை அமைச்சர் காந்தி, மேயர் ப்ரியா, பாஜக அண்ணாமலை , எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.

மோடி ஸ்டாலின் - எப்போது மோடி தமிழ்நாடு வந்தாலும் அவரை வரவேற்க ஸ்டாலின் விமான நிலையம் செல்வார். என்னதான் மோதல் இருந்தாலும்.. சண்டை இருந்தாலும் ஸ்டாலின் பிரதமருக்கான இந்த மரியாதையை கொடுப்பார்.

ஆனால் நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்திற்கு செல்லவில்லை. இதற்கு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் கருத்து வேறுபாடு இல்லை. மாறாக.. மோடி வருவது அரசு நிகழ்ச்சி மட்டும் அல்ல. அது பாஜக பொதுக்கூட்டமும் கூட. அப்படி இருக்க பிரச்சாரத்திற்கு வருபவரை ஸ்டாலின் அழைத்தால் சரியாக இருக்காது. அது கட்சி அரசியல்.. பொது நிகழ்வு இல்லை. இதன் காரணமாக ஸ்டாலின் மோடியை அழைக்க செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இது லோக்சபா தேர்தல் காலம்.. அப்படிப்பட்ட நேரத்தில் எந்த ஒரு சந்திப்பும் கூட்டணி ரீதியான பேச்சுவார்த்தையோ அல்லது அரசியல் வியூகமோ என்றெல்லாம் விவாதிக்கப்படும். அதை கருத்தில் கொண்டே மோடியை ஸ்டாலின் தவிர்த்து இருக்கிறார் என்கிறார்கள்.

மோடி பேச்சு: நேற்று நிகழ்வில் பேசிய மோடி, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் உறுதியாக இருக்கிறேன். உலகின் 3 சிறந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாக நாடு உருவாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சென்னையின் பங்கு முக்கியம்.

சென்னையில் ரூ1,000 கோடிக்கான நகர்ப்புற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ, விமான நிலைய திட்டங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது., மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு இடையூறாக உள்ளது.

தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு பணியாற்றுகிறது. சென்னைவாசிகளின் தேவைகளை புறக்கணிக்கிறது திமுக அரசு. சென்னையை புயல் தாக்கிய போது பெரும் துயரம் ஏற்பட்டது. சென்னை புயலால் பாதிக்கப்பட்ட போது திமுக அரசு உதவவில்லை.

சென்னை புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை அதிகரித்துவிட்டது. திமுக அரசு வெள்ள தடுப்பு மேலாண்மையை மேற்கொள்ளவில்லை. திமுக அரசு ஊடகங்களை சரி செய்து வெள்ள நீர் வடிந்துவிட்டதாக பிரசாரம் செய்தது.மக்களின் துயரம் பற்றி திமுக அரசுக்கு அக்கறையும் கவலையும் இல்லை.

தமிழ்நாட்டு மக்களைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் திமுக அரசுக்கு அக்கறையே இல்லை என்று மோடி குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+