Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை, சென்னையால் "புகையுது" கோட்டை.. ஸ்டாலின் வேற ஊர்ல இல்லை.. அமுதா எங்கே காணோம்?.. இதென்ன புதுசா

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவல்துறையில் நேற்றைய தினம் 2 டிரான்ஸ்பர்கள் நடந்துள்ளன.. இந்த இடமாற்றம் குறித்துதான் கோட்டையில் ஒரே பரபரப்பாக பேசப்படுகிறது.. இதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. என்ன நடந்தது?

ஏற்கனவே, தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.. அந்தவரிசையில், ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட நிலையில், ஐஜிக்களின் டிரான்ஸ்பர்களும் ஆரம்பமாகி உள்ளது.

Why did madurai, chennai, IGs transfer in tamil nadu and what happened in the Secretariat by Home Secretary Amudha

மேலும், விரைவில் எம்பி தேர்தல் நெருங்கி வருகிறது.. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தலை நடத்தவும் முடிவாகி உள்ளது.. இதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டிரான்ஸ்பர்: இப்படிப்பட்ட சூழலில் கடந்த வாரம் தேர்தல் ஆணையம் முக்கிய ஒன்றை பிறப்பித்திருந்தது.. அதன்படி, ஒரே இடத்தில் 3 வருடங்களுக்கு மேலாக பணிபுரியும் போலீசாரை பணியிட மாற்றம் செய்யும்படி அனைத்து மாநில காவல் துறைக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது..

அந்தவகையில், தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர்ஜிவால் நேற்றைய தினம் சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அனுப்பியிருந்தார். அதில், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த கண்ணன் தென் மண்டல ஐ.ஜி.யாகவும், தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த நரேந்திரன் நாயர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருமே பரஸ்பரம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பனீந்தரரெட்டி: இதற்கான உத்தரவு போக்குவரத்துத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்தரரெட்டி பெயரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இடமாறுதல் உத்தரவு, உள்துறை செயலாளர் பெயரில்தான் வரவேண்டும். ஆனால், பனீந்தரரெட்டி பெயரில் வந்திருக்கிறது. இதுதான் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

இதுகுறித்து விசாரித்தபோது, " உள்துறை செயலாளர் அமுதா விடுமுறையில் சென்றிருக்கிறார். அதனால் உள்துறையை கூடுதல் பொறுப்பாக பனீந்திரரெட்டியிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், அவர் பெயரில் இடமாறுதல் வந்துள்ளது. இதில் தவறேதும் இல்லை " என்கிறது கோட்டை வட்டாரம்.

கோட்டை விவகாரம்: ஆனால், ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பினரோ, "உள்துறை என்பது சென்சிட்டிவ்வான போஸ்ட். அத்துறையின் செக்ரட்டரி லீவில் சென்றால் அதை வெளிப்படையாக அரசு தெரியப்படுத்த வேண்டும். உள்துறையை கூடுதல் பொறுப்பாக வேறு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கொடுக்கப்பட்டால் அதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஆனால், இங்கு இரண்டுமே வெளிப்படையாக அரசால் அறிவிக்கப்படவில்லை.

அப்படியானால், முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இல்லாத சூழலில் அரசு நிர்வாகத்தில் என்ன நடக்கிறது ? சிலரின் உத்தரவுகளை நிறைவேற்ற அமுதா உடன்படாததால் அவரை லீவில் அனுப்பி வைத்துவிட்டு, தங்களுக்குத் தோதான ஒரு அதிகாரியிடம் அதாவது பனீந்திரரெட்டியிடம் உள்துறையை கொடுத்து அதன் மூலம் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள காய்கள் நகர்த்தப்படுகிறதா? அரசு நிர்வாகத்தில் பல மூடு மந்திரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன " என்று சர்ச்சையை கிளப்புகின்றனர்.

ஸ்டாலின்: ஐ.பி.எஸ். வட்டாரங்களில் இதுதான் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில், ஆளும் தரப்பில் என்னென்ன சர்ச்சைகள், புகார்கள் கிளம்புமோ, அத்தனையையும் அரசியலாக்க எதிர்க்கட்சிகள் காத்து கொண்டிருக்கின்றன..

குறிப்பாக அரசு இயந்திரங்களின் நடவடிக்கைகளை ராஜ்பவனும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அப்படியிருக்கும்போது, ஆரம்பத்திலேயே முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு, இதுபோன்ற விவகாரங்களுக்கு இடம்தராமல், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் சிலர் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+