Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமாவளவன் சட்டசபை தேர்தலில் போட்டி ஏன்? ஸ்டாலின் - விஜய் தான் காரணமா? பின்னணியில் 3 முக்கிய மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் திருமாவளவன் களமிறங்கி உள்ளார். இவர் தற்போது எம்பியாக உள்ள நிலையில் திடீரென்று சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து நிலையில் அதன் பின்னணியில் 3 முக்கிய மேட்டர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதையடுத்து இந்த தேர்தலில் 10 தொகுதிகள் வரை விசிக எதிர்பார்த்தது. ஆனால் இரட்டை இலக்கத்தில் தொகுதி கிடைக்கவில்லை.

why-did-vck-thirumavalavan-contest-at-kattumannar-koil-in-tamil-nadu-assembly-election-3-reasons-he

மாறாக கடந்த சட்டசபை தேர்தலை விட விசிகவிற்கு 8 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டன. இதில் 6 தனித்தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகளும் அடங்கும். அதன்படி இன்று சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திருமாவளவன் அறிவித்தார்.

திண்டிவனம் (தனி)தொகுதியில் வன்னியரசு, கள்ளக்குறிச்சி ((தனி)) தொகுதியில் மாலதி, செய்யூர் ((தனி))தொகுதியில் சிந்தனை செல்வன், பெரியகுளம் ((தனி)) தொகுதியில் ஆற்றல் அரசு, அரக்கோணம் ((தனி)) தொகுதியில் எழில் கரோலின், பண்ருட்டி தொகுதியில் அப்துல் ரஹ்மான், திருப்போரூர் பன்னீர் தாஸ் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்தார்.

திருமாவளவன் போட்டி

மீதமுள்ள காட்டும்ன்னார் கோவில் (தனி) தொகுதியில் திருமாவளவனே போட்டியிடுவதாக அறிவித்தார். இவர் தற்போது சிதம்பரம் லோக்சபா தொகுதியின் எம்பியாக உள்ளார். இதன்மூலம் அவர் தேசிய அரசியலில் இருந்து தமிழக அரசியலுக்கு திரும்பி உள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக திருமாவளவன் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. இப்படியான சூழலில் அவரது இந்த அறிவிப்பு அனைவருக்கும் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. இந்நிலையில் தான் திருமாவளவன் சட்டசபை தேர்தலில் என்ட்ரி கொடுத்து இருப்பதன் பின்னணியில் 3 முக்கிய விஷயங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

முதல் விஷயம்

அதன்படி முதல் விஷயம் என்னவென்றால் திருமாவளவன் எம்பியாக இருப்பதால் தமிழக அரசியலில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகளை பேசி அதற்கு தீர்வு காண்பதில் சில பிரச்சனைகள் இருப்பதாக திருமாவளவன் நினைத்து இருக்கலாம். இதனால் எம்எல்ஏ ஆகிவிட்டால் சட்டசபையில் உரக்க தனது கருத்தை முன்வைக்கலாம். இதன்மூலம் நேரடியாக அரசின் கவனத்துக்கு பிரச்சனைகளை கொண்டு சென்று தீர்வு காண முடியும் என்று திருமாவளவன் நினைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

2வது விஷயம் ஸ்டாலின்

2வது விஷயம் என்னவென்றால் ஸ்டாலினிடம் திருமாவளவன் 10 சீட்டுகள் வரை கேட்டார். ஆனால் ஸ்டாலின் 8 தொகுதிகளை மட்டுமே வழங்கினார். அதேவேளையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 0.43 சதவீத ஓட்டுகள் பெற்றிருந்த தேமுதிகவிற்கு 10 சட்டசபை தொகுதி + ஒரு ராஜ்யசபா சீட்டை வழங்கினார். இதனை திருமாவளவனால் ஏற்க முடியவில்லை. இதனால் அவர் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது கட்சியை மாநிலம் முழுவதும் பலப்படுத்தி தனது சக்தியை நிரூபிக்க திருமாவளவன் முயலும் வகையில் இந்த முயற்சியை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

3வது விஷயம் விஜய்

3வது விஷயம் என்னவென்றால் தற்போது விஜய் அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். விஜய்க்கு வடமாநிலங்களில் செல்வாக்கு அதிகம் உள்ளது. குறிப்பாக பட்டியலின மக்கள் விஜயை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. இது திருமாவளவனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் விஜய் பக்கம் வடமாநிலங்களில் பட்டியலினத்தவர்களாக உள்ள பறையர் மக்களின் வாக்குகளை தடுக்க வேண்டிய கட்டாயம் திருமாவளவனுக்கு உள்ளது. இதனால் அவரே நேரடியாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இதன்மூலம் தனது வாக்கு வங்கியான பட்டியலினத்தவர்களின் ஓட்டுகளை விசிக மற்றும் திமுக கூட்டணியில் தக்க வைக்க முடியும் என திருமாவளவன் நம்பி இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

காட்டுமன்னார் கோவில் தொகுதி பின்னணி

இந்நிலையில் தான் அவர் திடீரென்று சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது இந்த காட்டுமன்னார் கோவில் எம்எல்ஏவாக விசிகவின் சிந்தனை செல்வன் உள்ளார். தற்போது அவருக்கு பதில் திருமாவளவன் களமிறங்கி உள்ளார். இதற்கு முன்பு விசிக சார்பில் 2006ல் ரவிக்குமார் இந்த தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். அதன்பிறகு இந்த தொகுதியில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிட்டார். அதில் திருமாவளவன் 87 ஓட்டகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் அதிமுகவின் நா. முருகுமாறன் 48,450 ஓட்டுகள் பெற்றார். தொல் திருமாவளவன் 48,363 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தற்போது மீண்டும் திருமாவளவன் காட்டுமன்னார் கோவிலில் களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+