"கேட்டுச்சா".. ஸ்டாலின் ஏன் கட்டிப்பிடித்தார் தெரியுமா.. திருமாவளவன் என்ன இப்படி சொல்லிட்டாரே?
பேரறிவாளன் குற்றமற்றவர் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்
சென்னை: பேரறிவாளன் விடுதலை குறித்தும், முதல்வர் ஸ்டாலின் அவரை ஆரத்தழுவி வரவேற்றது குறித்தும் விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனை, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் விடுவித்தது.. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
அதேபோல, எடப்பாடி பழனிசாமியையும் பேரறிவாளன் சந்தித்தார்.. வைகோ உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் பேரறிவாளன் சந்தித்து பேசினார்..

கட்டியணைத்த முதல்வர்
ஆனால், முதல்வருடனான சந்திப்பின்போது, பேரறிவாளன் முதுகில் தட்டிக் கொடுத்துள்ளார் ஸ்டாலின்... இது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.. பேரறிவாளன் விடுதலையாலும் முதல்வர் ஸ்டாலின் அவரை அரவணைத்ததாலும் காங்கிரஸார் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் வாயில் துணியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்... இதனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மிகப்பெரிய சிக்கலையும் தர்மசங்கடத்தையும் இது ஏற்படுத்தி வருகிறது.

அண்ணாமலை
இந்த படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகை குஷ்பு, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரசின் நடவடிக்கை இருக்கிறது என்று கேட்டிருந்தார்.. அதேபோல, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோரும் ஸ்டாலினின் நடவடிக்கையை விமர்சித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

புத்தர் சிலை
இப்படி நாலாபக்கமிருந்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்விகளும், விமர்சனமும் எழுந்து கொண்டே இருந்தாலும், திமுக தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும், காரணமும், விளக்கமும் தரப்படவில்லை.. இந்நிலையில்தான் நேற்றைய தினம் பேரறிவாளன் திருமாவளவனை சந்தித்தார்.. அப்போது பேரறிவாளனுக்கு திருமாவளவன், புத்தர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார்... இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை குறித்து திருமாவளவன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆரத்தழுவியது ஏன்?
அப்போது, "பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றதை பலரும் கண்டித்து வருகின்றனரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு திருமாவளவன், "உச்சநீதிமன்றமே அவரை விடுதலை செய்துள்ளது அதனால்தான் முதல்வர் அவரை ஆரத்தழுவி வரவேற்றார்" என்றார்.. உடனே செய்தியாளர்கள், நீதிமன்றத்தில் அவரை நிரபராதி என குறிப்பிடவில்லையே என்று மறுபடியும் கேள்வி எழுப்பினர்.

நீதிபதி சொல்லவில்லையே
அதற்கு திருமாவளவன், "அவர் குற்றவாளி என்றும் நீதிபதி தெரிவிக்கவில்லையே.. அதனால், அதை நாம் நிரபராதி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.. அரசியல் காரணம் சொல்லி நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்யவில்லை.. சட்டப்படி விடுதலை செய்துள்ளதால் பேரறிவாளன் குற்றமற்றவர்" என்றார்... திருமாவளவனின் இந்த பேச்சு சோஷியல் மீடியாவில் விவாதத்தை துவக்கி உள்ளது.

கொந்தளிப்பு
நேற்றைய தினம் பேட்டியின்போதும் திருமாவளவன் பேசும்போது, "பேரறிவாளன் விடுதலை பெற்றுள்ளது மன நிம்மதியை அளிக்கிறது... கட்சி, மொழி என எந்தப் பாகுபாடும் இல்லாமல் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கும் இந்தக் குற்றத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என விசாரிக்கும் போதே தெரிய வந்தது" என்று கூறியிருந்தார்.. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கொந்தளித்து போயுள்ள நிலையில், திருமாவின் இந்த கருத்தை கதர் கட்சி எப்படி எதிர்கொள்ள போகிறது? என்ன சொல்ல போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications