ராமதாசை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது ஏன்? ஸ்டாலின் சொன்ன பதில்
Recommended Video
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸை மிகக் கடுமையான வார்த்தைகளில் எதற்காக விமர்சனம் செய்தீர்கள், என்ற நிருபரின் கேள்விக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலளித்தார்.
அதிமுகவுடன், பாமக கூட்டணி அமைத்துக் கொண்டு நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், ராமதாசுக்கு சூடு, சொரணை இல்லை என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்தார்.
இந்த பேச்சு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இன்று காங்கிரஸ், திமுக கூட்டணி அமைத்த பிறகு, நிருபர்களை சந்தித்த ஸ்டாலினிடம் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதிமுக தரப்பில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டதன் காரணமாக, நீங்கள் ராமதாஸை கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்தீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஸ்டாலின் அளித்த பதில்: காட்டமாக நான் விமர்சிக்கவில்லை. ஏற்கனவே ராமதாஸ் அதிமுகவை, முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி யையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதை எல்லாம் ஒப்பிட்டால், இதெல்லாம் வெறும் சாதாரணம், என்று சிரித்தபடி பதிலளித்தார் ஸ்டாலின்.