பாமகவை எப்படியாவது வளைச்சு போடுங்க.. துடிதுடித்த எடப்பாடி.. பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?
சென்னை: பாமக உடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக கூட்டணிக்கு வர முடிவு செய்துள்ளன என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கூட்டணி உறுதி: அதன்படி பாமக 6 சீட். தேமுதிக 3 சீட் என்று இறங்கி வர முடிவு செய்துள்ளன. இரண்டு ராஜ்யசபா இடங்கள் இரண்டு கட்சிக்கும் தலா 1 என்று பிரித்து கொடுக்கப்பட உள்ளன. இது போக பணம் கேட்டதில் நான்கில் ஒரு பகுதி பிரித்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாம். பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்.. நாம் பெரிய கூட்டணி அமைப்போம் என்று அதிமுக வைத்த வாதத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டார்களாம்.
அண்ணாமலையும் பாஜக சார்பாக கூட்டணி வைக்க இறங்கி வரவில்லை என்பதால் இப்படி அதிமுக பக்கம் செல்ல இவர்கள் முடிவு செய்துள்ளார்களாம். இதனால் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையும் நிலைக்கு வந்து இருப்பதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுகவை சேர்ந்து விஐபி ஒருவர் திரைமறைவு பேச்சுவார்த்தைகளை செய்து வருகிறாராம். அதன் மூலமே இந்த கூட்டணி உருவாகி வருகிறதாம்.
எடப்பாடி விடாப்பிடி: இந்த நிலையில்தான் பாமக உடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அவர் ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், பாமக இனிமேல் தமிழ்நாட்டில் வெற்றி கூட்டணியை முடிவு செய்யும் கட்சி அல்ல. அது இரண்டாவது இடத்தை முடிவு செய்யும் கட்சி . 2009 வரைதான் பாமக பலமாக இருந்தது. 2004, 2009 வரை எல்லாம் பாமக வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. இப்போது வடமாவட்டங்களில் பாமக வெறுமனே இரண்டாம் இடத்தை பிடிப்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறி உள்ளது.
10.5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தும் கூட.. அதிமுக கூட்டணியில் இருந்தும் கூட பாமக பெரிதாக அதிமுகவை வெற்றிபெற வைக்க முடியவில்லை. இன்னொரு பக்கம் பாமக திமுக கூட்டணிக்கும் செல்ல முடியாது. ஏனென்றால் விசிக - திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. அப்படிப்பட்ட பாமகவின் கதவை அதிமுக தட்டிக்கொண்டு இருக்கிறது. பாமக இருந்தால்தான் 20 இடங்களில் அதிமுக இரண்டாம் இடமாவது வரும்.
கூட்டணி: எப்படியாவது இரண்டாம் இடம் வந்துவிட வேண்டும் என்பதில்தான் அதிமுக உறுதியாக உள்ளது. இரண்டாம் இடத்தை பாஜகவிற்கு விட்டுக்கொடுத்துவிட கூடாது என்பதற்காகவே பாமகவின் உதவியை நாடிக்கொண்டு இருக்கிறது அதிமுக. பாமக திமுக கூட்டணிக்கும் செல்ல முடியாது. விசிக உடன் இருக்கும் வெற்றி கூட்டணியை திமுக வேண்டாம் என்று சொல்லாது.
இதுவரை தமிழ்நாட்டில் பாமகதான் இரண்டாம் இடம் பிடிக்க போகும் கூட்டணியை முடிவு செய்துள்ளது. அதனால் பாமக உடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications