5000 "பைல்ஸ்".. அடித்து ஆடும் பிடிஆர்! ஸ்டாலின் தந்த "ப்ரீ ஹேண்ட்".. அப்படியே திரும்பி போன கோப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னிடம் 5000க்கும் மேற்பட்ட கோப்புகள் வந்துள்ளதாகவும், அதில் பல நூறு கோப்புகளை திருப்பி அனுப்பி உள்ளதாகவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதி துறையை மட்டுமே கவனித்து வந்தாலும் கூட, சட்டப்படி மற்ற துறைக்கான சில கோப்புகளிலும் கையெழுத்து போட வேண்டும். அதாவது வேறு துறையில் இருந்து நிதி துறைக்கு நிதி ஒதுக்க கேட்டு கோப்புகள் வரும்.

இந்த கோப்புகளை ஆய்வு செய்து, தேவையான கோப்புகளில் நிதி அமைச்சர் கையெழுத்து போட வேண்டும். சில துறைகளுக்கு இதன் மூலமே நிதித்துறையின் பணம் அளிக்கப்படும்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

இந்த நிலையில்தான் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த நிதி விவகாரம் பற்றி பேசி இருக்கிறார். மதுரையில் அவர் அளித்த பேட்டியில், எனக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் உள்ள கொள்கை என்னவென்றால்.. நாங்கள் திராவிட கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்கிறோம். எந்த முடிவு எடுத்தாலும் கொள்கை அடிப்படையில்தான் அந்த முடிவை எடுக்கிறோம். ஒரு கோப்பில் கையெழுத்து போடும் முன் கூட.. இது கொள்கை அடிப்படையில் சரியாக இருக்கிறதா? கொள்கைக்கு ஏற்றபடி இருக்கிறதா? என்று ஆய்வு செய்கிறோம். கொள்கை அடிப்படையிலேயேதான் நிதி ஒதுக்குகிறோம்.

கோப்புகள்

கோப்புகள்

என்னிடம் 5000க்கும் மேல் கோப்புகள் வந்து உள்ளன. இவற்றில் பலவற்றை நான் திருப்பி அனுப்பி இருக்கிறேன். பல நூறு கோப்புகளை திருப்பி அனுப்பி உள்ளேன். முதல்வர் ஸ்டாலின் எனக்கு அந்த அளவிற்கு ஊக்கம் தருகிறார். பல துறைகளில் இருந்து வரும் கோப்புகள் நிதி துறை ஒப்புதலுக்கு வரும். அதில் பல அதிகாரிகள் கையெழுத்து போட்டு இருப்பார்கள்.

அதிகாரிகள்

அதிகாரிகள்

10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதில் கையெழுத்து போட்டு இருப்பார்கள். ஆனால் கொள்கை ரீதியாக அந்த கோப்புகள் முரணாக இருந்தால் அதை திருப்பி அனுப்பி இருக்கிறேன். அதேபோல் கொள்கை ரீதியாக எதிராக இருக்கும் கோப்புகளை திருத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லியும் திருப்பி அனுப்பி இருக்கிறேன். முதல்வருக்கு தெரியும் நான் ஏன் இப்படி விளக்கம் கேட்கிறேன் என்று.

கோப்பு

கோப்பு

அவருக்கு தெரியும் நான் ஏன் இப்படி சில கோப்புகளை திருப்பு அனுப்புகிறேன் என்று. முதல்வர் கொடுத்த சுதந்திரம் மற்றும் ஊக்கம் இது. அவரின் சுதந்திரம் இல்லை என்றால் இப்படி என்னால் செயல்பட முடியாது என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார். கடந்த ஆட்சியில் போல நடந்ததை போல சில திட்டங்களை அமலுக்கு வந்துவிட கூடாது. எந்த திட்டமும் கொள்கைக்கு எதிராக இருக்க கூடாது என்ற "மேலிட" உத்தரவு காரணமாக அமைச்சர் இப்படி கோப்புகளை திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+