Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென தமிழ்நாடு வரும்.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.. காரணத்தை கேட்டா.. ஷாக் ஆகிடுவீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நாளை தமிழ்நாடு வருகிறார்.

ஒரே நாடு; ஒரே தேர்தல் எனும் திட்டம் தொடர்பான கருத்தரங்க கூட்டம் ஒன்றை தமிழக பாஜக நாளை (26 -ந்தேதி) சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கத்தில் நடத்துகிறது. இதில் பாஜக தலைவர்கள் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்த திட்டத்தின் கருத்துருவாக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளும் இதில் பகிரப்படும் எனத் தெரிகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கலந்து கொள்கிறார். இதற்காக, இன்று இரவு 7:30-க்கு சென்னை வருகிறார் பவன் கல்யாண். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கராத்தே தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் அவரை வரவேற்கின்றனர்.

Why is Andhra Pradesh Dy CM Pawan Kalayan coming to Tamil Nadu suddenly

இன்று இரவு பவன் கல்யாண் தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் தவிர, தமிழக பிரபலங்கள் சிலரை சந்திக்க அவர்களுக்கு அப்பாயிண்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். இன்று அல்லது நாளை அவர்களை சந்திக்கிறார் பவன். தமிழகத்தில் ஜனசேனா கட்சியைத் துவக்கும் ஒரு யோசனையை சில மாதங்களாக அசை போட்டு வரும் பவன் கல்யாண், அது குறித்து விவாதிக்கவிருக்கிறாராம். இதற்காகவே, இந்த சந்திப்பை வைத்திருக்கிறார் என்கிறார்கள்.

'ஒரே நாடு ஒரு தேர்தல்' (ONOP) செயல்படுத்த அரசாங்கம் என்ன மாதிரியாக திட்டமிட்டுள்ளது என்று இங்கே பார்க்கலாம்:

ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்
முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும்
இரண்டாம் கட்டமாக, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
இரண்டாம் கட்ட தேர்தல் முதல் பொதுத் தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் நடத்தப்படும்
அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் இருக்கும்
நாடு முழுவதும் விரிவான பிரச்சாரம் நடக்கும். இதனால் 5 வருடத்திற்கு ஒரு முறை அந்த 3 மாத காலம் மட்டும் தேர்தல் காலமாக இருக்கும்.
ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அமலாக்கக் குழு அமைக்கப்படும்.

செலவுகள் குறையும்: தேர்தல் செலவுகள் இதன் மூலம் குறையும். அதேபோல் தேவையில்லாத பிரச்சார செலவுகளும் இதன் மூலம் குறையும். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி இந்த தேர்தல் முறை கொண்டு வரப்பட உள்ளது.

ஆனால் சில சிக்கல்கள் உள்ளன: ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் சில சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. அரசியல் வல்லுனர்கள் இது தொடர்பாக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளனர்.

1. தேர்தல் முடிந்த பின் மாநில அரசு திடீரென கவிழ்ந்தால் என்ன ஆகும்?

2. தேர்தல் முடிந்த பின் மத்திய அரசு கவிழ்ந்தால் என்ன ஆகும்?

3. ஒரு சில மாநிலங்களில் மட்டும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் என்ன ஆகும்?

4. இப்போது சமீபத்தில் தேர்தல் நடந்த மாநிலங்களில் ஆட்சி நீட்டிக்கப்படுமா, கவிழ்க்கப்படுமா?

5. சட்டமன்றங்கள், மாநில சட்டமன்றங்களை கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 174 ல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும். ஆனால் அப்படி செய்தால் மாநிலங்களின் உரிமை நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+