திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவது ஏன்?... அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி
சென்னை: திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி உள்ளார்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கூட்டுறவு சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

கூட்டுறவுத்துறை சார்பில் இதுவரை 28 பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டுள்ளன, மேலும் 13 பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்படும். மக்களுக்கு தேவையான மேலும் பல பொருட்களை கூட்டுறவு துறை சார்பில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. சரியான விலையில் தரமான பெட்ரோல் கிடைப்பது உறுதி செய்யப்படும்
ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரை அரசுக்கு கிடைத்ததும் சம்பள உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். மக்களுக்கு தேவையான மேலும் பல பொருட்களை கூட்டுறவு துறை சார்பில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளில் கூடுதல் பொருட்களை வாங்கும்படி வற்புறுத்தக்கூடாது. எடை குறையாமல் பொருட்களை வழங்க வேண்டும். முறையாக பொருட்கள் வழங்காத ரேஷன் கடைகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ சுறினார்.
மேலும், இருமொழி கொள்கை தான் தமிழக அரசின் கொள்கை என்பதை முதலமைச்சர் விளக்கமாக கூறி இருக்கிறார். மும்மொழி கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியை எதிர்ப்பதாக கூறுகிறார். ஆனால் அவருடைய உறவினர்கள் நடத்தும் பள்ளியில் இந்தி கற்பிக்கப்படுகிறது. தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு என்ன சொல்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.
இதே விழாவில் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், கூட்டுறவுத்துறை என்பது பணக்காரத்துறை என்றும், பணக்கார அமைச்சரான செல்லூர் ராஜூ, இப்பகுதியில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அமைச்சர் ஜெயக்குமாரின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என அதே மேடையில் அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதியளித்தார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications