டிரோனை விட்ட பாகிஸ்தானின்.. முதுகெலும்பை உடைத்த இந்தியா.. ஒரு நொடி கூட தாமதிக்கலையே!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரிலும், பஞ்சாப்பிலும் பாகிஸ்தான் நடத்த முயன்று இருக்கும் தாக்குதல் மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த போகிறது. பாகிஸ்தான் கைவைக்க கூடாத இடத்தில் கைவைத்து விட்டது. இந்த தாக்குதல் ஏன் சாதாரண விஷயம் கிடையாது.. இதை ஏன் இந்தியா சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது .. அதற்கு உதாரணமாக தற்போது பாகிஸ்தானின் இருதயத்தில் அடிக்க தொடங்கி உள்ளது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல்நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.

பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

Why is Pakistan decision to attack on Punjab and Jammu Kashmir is a bad decision

பாகிஸ்தான் இப்போது தாக்குவது எல்லாம் பொதுமக்கள் உள்ள இடங்கள். அல்லது ராணுவ தளவாடங்கள். விமான நிலையம் போன்ற பொது இடங்கள்.

இந்தியா தாக்குதல் நடத்திய போது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தளங்களில் மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது.அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வில்லை.

இப்போது பாகிஸ்தான் திருப்பி அடிக்கிறது.. இந்தியாவில் பாகிஸ்தான் எங்கே தாக்க வேண்டும்? இந்திய ராணுவ தளவாடங்களை தாக்க முடியாது. தாக்கினால் அது போர் ஆக மாறும். இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வில்லை. அதனால் பாகிஸ்தானும் இந்திய ராணுவ தளவாடங்களை தாக்க முடியாது.

சரி.. நாம் தாக்கியது போல தீவிரவாத தளவாடங்களை தாக்க முடியாது. ஏனென்றால் இந்தியாவில் அப்படி கேம்ப் எதுவுமே இல்லை. காஷ்மீரில் உள்ள ஒரு சில தீவிரவாத கேம்ப் கூட பாகிஸ்தானுக்கு ஆதரவானது. இப்போது பாகிஸ்தான் நினைத்தால் கூட எங்கே தாக்குவது என்ற முடிவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ஆனால் அதை மீறி பாகிஸ்தான் சிவிலியன் இடங்களை தாக்கி உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தளங்களில் மட்டுமே இந்தியா தாக்கியது. இதற்கு பதிலடியாக இந்தியாவில் பாகிஸ்தான் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை தாக்கி உள்ளது. இதுதான் act of war என்பார்கள்.

அதாவது போரை தூண்டும் செயல். போர் செயல். பாகிஸ்தான் செய்திருப்பது போரின் தொடக்கம்தான். இதற்கு கண்டிப்பாக இனி இந்தியா கடுமையான பதிலடியை தரும். நினைத்து பார்க்க முடியாத மிக மோசமான பதிலடியை தரும். ஏனென்றால் பாகிஸ்தான் தொட்டது இந்திய பொதுமக்களை. இந்திய மக்களை வீழ்த்த முயன்றதை இந்தியா சாதாரணமாக எடுத்துக்கொள்வது. இது பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்யும் செயல் அல்ல.. அந்நாட்டு அரசின் ராணுவம் செய்யும் செயல்.

எனவே இனி இது இந்திய ராணுவம் vs தீவிரவாதம் இடையிலான மோதல் இல்லை. இந்திய ராணுவம் vs பாகிஸ்தான் ராணுவம் இடையிலான மோதல். அதற்கு எடுத்துக்காட்டாகவே தற்போது பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைத்து உள்ளது. பாகிஸ்தானின் இருதயத்தில் அடிக்க தொடங்கி உள்ளது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+