வானிலை ஆய்வில் குழப்பங்கள்?... அதற்கு இதுதான் காரணம்..
சென்னை: கனமழைக்குப் பின் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தென் மாவட்டங்களில் பெய்த அதிக கனமழையை இந்திய வானிலை ஆய்வு மையம் சரியாகக் கணிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.

அதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது? உண்மையாகவே இந்திய வானிலை மையம் முறையாக எச்சரிக்கவில்லையா?
வானிலை ஆய்வில் ஏன் இத்தனை குழப்பங்கள்? நம்மிடம் வசதிகள் இல்லையா? சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் சில கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
"தமிழ்நாட்டில் இதற்கு முன்னால் நீலகிரியில் உள்ள கேத்தி பகுதியில் 85செமீட்டர் மழைப் பதிவானது. அதுதான் இதுவரை அதி கனமழையாக இருந்தது.
அடுத்து 1976இல் சென்னையில் 24 மணிநேரத்தில் 45செமீட்டர் மழை பெய்துள்ளது. ஆனால் இதையும் தாண்டி இந்தமுறை காயல்பட்டினத்தில் 95செமீட்டர் பதிவாகி இருக்கிறது.

இதற்கு வானிலை அமைப்பின் கூறுகள்தான் காரணம். தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் கிழக்கிலிருந்து ஈரம் மிகுந்த வங்கக் காற்று வீசி உள்ளது. இந்தியக் கடல் பகுதியின் தெற்கிலிருந்து இந்த ஈரம் மிகுந்த காற்று வருகிறது. இந்த இரண்டும் சேர்ந்து சுழற்றி உருவாகி உள்ளது. இதுதான் பிரதான காரணம்.
அடுத்து அதற்கு ஆதரவாக மேலடுக்கில் 5.8 உயரம் வரை ஒரு சுழற்சி உருவாகியுள்ளது. இந்தச் சுழற்சியும் சேர்ந்ததால்தான் அதிக மழை பெய்துள்ளது.
ஈரம் மிகுந்த காற்று, பலமான காற்று அடுத்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, கூடவே மேலடுக்கு சுழற்சி இவை அனைத்தும் சேர்ந்துள்ளது. கூடவே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் பங்களிப்பும் இதில் கலந்திருக்கிறது. இந்த மலையானது காற்றுக்கு ஒரு ஏற்றத்தைக் கொடுக்கும்.

இதனால்தான் தென்மாவட்டங்களில் காற்று குவிதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சுழிப்புத் திறன் அதிகரித்துள்ளது. காற்றானது பல திசைகளிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருகிறது.
வங்கக் கடலிலிருந்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்து வந்துள்ளது. இது ஒரு இடத்தில் சேர்ந்தால் அதற்குப் பெயர் காற்றுக் குவிதல் எனப் பெயர்.
இப்படி காற்று ஒரு இடத்தில் குவியும்போது, சுழிப்பு திறன் அதிகரிக்கும். அப்படிச் சுழிப்பு அதிகமாவதை இயற்கை ஏற்காது. ஆகவே அது மிதப்பாற்றல் பெற்று மேலே செல்ல முற்படும்.
அது மேகமாக எந்தளவுக்கு மேல் நோக்கிச் செல்கிறதோ, அந்தளவுக்கு மழை பெய்யும். அதன் காரணமாகவே இந்தப் பெரும் மழை தற்போது ஏற்பட்டுள்ளது.

பொதுவாக மன்னார் வளைகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால் தமிழ்நாடு முழுவதும் மழை வரும். அதை மாதிரியான ஒரு அமைப்புகூட தற்போது இருந்துள்ளது.
நான் பொறுப்பிலிருந்த காலத்தில் 25செமீட்டர்தான் அதிக கனமழைக்கான அளவாக இருந்தது. இப்போது 20செமீட்டரையே அதிக கனமழைக்கான அளவீடாக மாற்றி இருக்கிறார்கள்.
இந்த மழையின் அளவை பல்வேறுவிதமான கணினிகள் கணிக்கின்றன. Access weather model australia, American gfs weather model, European weather model, German weather model எனப் பல வகைகள் உள்ளன. இந்தியாவில் American gfs weather model ஐ வைத்துத்தான் கணிக்கிறோம்.
இந்த ஒவ்வொரு மாடல் கணினியும் ஒவ்வொருவிதமான கணிப்பைத்தான் காட்டும். ஒரு கணினியில் வரும் ரிசல்ட் அப்படியே மற்றொரு கணினியில் இருக்காது.
ஆகவே, நாம் தோராயமாகத்தான் கணிக்க முடியும். 20 செமீட்டர் மேல் கனமழை என்றால் அது எந்த அளவுக்குப் போகலாம். 20 செமீட்டர் என்று வந்துவிட்டாலே நாம் உஷார் ஆகிவிட வேண்டும். அதுவே நல்லது.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் European weather model மிகச் சிறப்பாகக் கணிக்கும் என்று சொல்வார்கள். அதில் கூட துல்லியம் இருக்கும் எனச் சொல்ல முடியாது" என்றார் அவர்
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications