நிலநடுக்கத்திற்கு கூட உதவினோமே! இந்தியாவை துருக்கி கடுமையாக எதிர்ப்பது ஏன்? ஓ இதுதான் காரணமா!
சென்னை: இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த மோதலில்.. பாகிஸ்தானை துருக்கி தீவிரமாக ஆதரித்தது பலருக்கும் தெரியும். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பின் சீனா + அமெரிக்கா + துருக்கி போன்ற சர்வதேச நாடுகளின் செயலும் இருக்கின்றன.
உதாரணமாக துருக்கி, சீனா ஆகியவை பாகிஸ்தானை நேரடியாக ஆதரித்தது. ராணுவ ரீதியாக அரசியல் ரீதியாக பாகிஸ்தானை சப்போர்ட் செய்தது.

வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது. இதிலேயே பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா ஆதரவு இருப்பது உறுதியானது. பாகிஸ்தான் தனது தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியது. 36 இடங்களைக் குறிவைத்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறையில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவை துருக்கி மற்றும் சீனாவின் டிரோன்கள், என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.
ஏன் ஆதரித்தது?
இந்தியா துருக்கியை நேரடியாக எதிர்த்தது இல்லை. நேரடியாக தாக்கியது இல்லை. ஏன் துருக்கி நிலநடுக்கத்திற்கு இந்தியா பணம் கூட அனுப்பி உள்ளது. ஆனால் இத்தனை இருந்தும், வரலாற்று ரீதியாக எதிரியாக இல்லாத இந்தியாவை துருக்கி எதிர்ப்பது ஏன்? போர் சமயத்தில் பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கு உதவுவது ஏன் என்ற கேள்வி பலருக்கு எழலாம். இதற்கான காரணங்களை இங்கே விளக்கி உள்ளோம்.
துருக்கி பாகிஸ்தானை ஏன் ஆதரிக்கிறது:
1. வலுவான இஸ்லாமிய பிணைப்பு: இரண்டும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் மற்றும் நீண்டகால மத மற்றும் கலாச்சார உறவைப் பகிர்ந்து கொள்கின்றன.
2.காஷ்மீர் நிலைப்பாடு: காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் நிலைப்பாட்டை துருக்கி ஆதரிக்கிறது, பெரும்பாலும் சர்வதேச மன்றங்களில் இந்தப் பிரச்சினையை எழுப்புகிறது.
3. இராணுவ உறவுகள்: துருக்கியும் பாகிஸ்தானும் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் இராணுவப் பயிற்சியில் ஒத்துழைக்கின்றன.
4. அரசியல் அமைப்பு: ஐ.நா. மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு) ஆகியவற்றில் எழுப்பப்படும் பிரச்சினைகளில் இரு நாடுகளும் பெரும்பாலும் இந்தியாவுக்கு எதிராக இணைகின்றன.
துருக்கி ஏன் இந்தியாவை எதிர்க்கிறது
1. காஷ்மீர் பிரச்சினை விமர்சனம்: இந்தியா 370வது பிரிவை நீக்கியதை துருக்கி வெளிப்படையாக விமர்சிக்கிறது. காஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசம் என்ற பாகிஸ்தானின் கருத்தை ஆதரிக்கிறது. காஷ்மீர் விவகாரம் காரணமாக துருக்கி இந்தியாவை எதிரியாக கருதுகிறது.
2. இந்தியா எதிர்ப்பு நிலைப்பாடு: துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் பலமுறை இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டுள்ளார், குறிப்பாக ஐ.நா. உரைகளின் போது. அவர் அங்கே பதவிக்கு வந்த பின் இந்திய எதிர்ப்பு அதிகம் ஆகிவிட்டது.
3. தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு: இந்தியாவின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக நிலைப்பாட்டை அடிக்கடி எதிர்க்கும் உலகளாவிய தீவிரவாத அமைப்புகளை துருக்கி ஆதரிக்கிறது. அதாவது பல தீவிரவாத அமைப்புகளுக்கு துருக்கி ஆயுதங்களை வழங்குகிறது.
4. பொருளாதார ஆதாயங்களுக்காக பாகிஸ்தானுடன் கூட்டணி: பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் துருக்கி பொருளாதார மற்றும் இராணுவ ஆதாயங்களைக் பெறுகிறது (எ.கா., பாதுகாப்பு ஏற்றுமதிகள்).
5. இந்தியாவின் உலகளாவிய எழுச்சியின் மீதான பொறாமை: உலக அரசியலில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் QUAD, BRICS போன்ற கூட்டணிகள் மற்றும் வலுவான அமெரிக்க உறவுகள் துருக்கியை ஓரங்கட்டப்பட்டதாக உணர வைக்கிறது.
6. UAE-இந்தியா நட்புறவை எதிர்த்தல்: UAE மற்றும் சவுதி அரேபியா இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதை துருக்கி விரும்பவில்லை. துருக்கி பாகிஸ்தானுடனான உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அதை எதிர்க்க முயல்கிறது.
7. இந்தியா-கிரீஸ்-சைப்ரஸ் உறவுகள்: துருக்கியின் போட்டியாளர்களான கிரீஸ் மற்றும் சைப்ரஸுடன் இந்தியா நல்ல உறவுகளைக் கொண்டுள்ளது. இதை துருக்கி விரும்பவில்லை.
8. இஸ்ரேல் உடன் இந்தியா நெருக்கமாகி வருவதையும் துருக்கி விரும்பவில்லை.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications