Vijay: விருகம்பாக்கத்தைவிட்டுவிட்டு! பெரம்பூரில் விஜய் போட்டியிடுவது ஏன்? திமுகவின் கோட்டையாச்சே!
சென்னை: தவெக தலைவரும் நடிகருமான விஜய், வரும் சட்டசபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் அவரை ஏன் பெரம்பூரில் தொகுதியில் போட்டியிட கூறுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவுகிறது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், முகூர்த்த நாள், சஷ்டியான இன்று, பெரம்பூரில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி, த.வெ.க. தனது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது.

இக்கூட்டத்தில் பேசிய கட்சி நிர்வாகிகள் சிலர், விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தனர்.
பெரம்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் சிவா, தனது உரையில், "தலைவருக்கு விருப்பமான தொகுதியாக பெரம்பூரை மாற்றிவிட்டேன். கடந்த ஓராண்டில், 44,000 புதிய உறுப்பினர்களை இத்தொகுதியில் கட்சியில் சேர்த்துள்ளேன்" என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், "இன்னும் 35 நாட்களே உள்ளன; ஒரு நாளும் தூங்காமல் உழைத்து, தளபதியை வெற்றி பெறச் செய்து முதல்வராக்க வேண்டும்" எனவும் அவர் தொண்டர்களுக்கு உத்வேகமளித்தார்.
சமீபத்தில் த.வெ.க.வில் இணைந்த அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.எஸ். பாபு, கூட்டத்தில் பேசுகையில், "முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கப் போகும் தொகுதி பெரம்பூர்தான். இங்கிருந்தே அடுத்த முதல்வர் உருவாகப் போகிறார்" எனத் தீர்க்கமாக அறிவித்தார்.
அவர் தனது உரையில், "தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளில் ஒரு வட்டச் செயலாளர் பதவி பெறவே 25 ஆண்டுகள் குடும்பத்தைப் பிரிந்து தியாகம் செய்ய வேண்டும். ஆனால், த.வெ.க.வில் ஓர் ஆட்டோ ஓட்டுநர் கூட மாவட்டச் செயலாளராக முடியும்" என்று கூறி, கட்சி வழங்கும் எளிமையான வளர்ச்சி வாய்ப்புகளைச் சுட்டிக் காட்டினார்.
"தி.மு.க., அ.தி.மு.க.வினர் என்ன செய்வார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். பொதுச்செயலாளர் உத்தரவிட்டால், நான் அவர்களை அத்தனை பேரையும் ஓட விட்டு விடுவேன்," என்று எச்சரித்த வி.எஸ். பாபு, "திரு.வி.க நகர், துறைமுகம், பெரம்பூர் தொகுதிகள் அனைத்தும் த.வெ.க.வுக்குதான். தலைவரை ஒரு நான்கைந்து முறை பிரசாரத்துக்கு அழைத்து வந்து விடுங்கள்" என்றும் சவால் விடுத்தார்.
இறுதியாக, இந்நிகழ்வில் பேசிய செங்கோட்டையன், "பெரம்பூர் தொகுதியில் எதிர்த்து நிற்பவர்கள் அனைவரும் தங்களது டெபாசிட்டை இழப்பார்கள்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். இந்தச் செயல்வீரர்கள் கூட்டம், வரவிருக்கும் தேர்தலுக்கான த.வெ.க.வின் தீவிரப் பிரச்சாரத்திற்கு வலுவான தொடக்கமாக அமைந்தது.
இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், எந்த இடத்தில் அதிக வறுமை இருக்கிறதோ அந்த இடத்தில் மக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் போட்டியிட வேண்டும் என தலைவர் விஜய் சொல்வார்.
எனவே அவர் பெரம்பூர் தொகுதியில் நிற்க வேண்டும் என தீர்மானம் போடுகிறேன். கொளத்தூர், ஆர்.கே.நகர் என வடசென்னையில் ஒரு தொகுதியில் நிற்க வேண்டும் என்பதுதான் தலைவரின் விருப்பம். வட சென்னை குறித்து தவறான பிம்பத்தை அதிமுக , திமுக வைத்துள்ளன. இதை மாற்ற வேண்டும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
மேலும் ஆதவ் கூறுகையில், அமைதியாக பிரச்சாரம் செய்த நமது நிர்வாகிகள் மீது கை வைத்ததால்தான் விஜய் முதலில் வடசென்னையில் களமிறங்குகிறார். 4 மாத கர்ப்பிணியான எங்கள் தங்கை வயிற்றில் எப்போது கை வைத்தார்களோ அப்போதே தலைவர் பெரம்பூரில் இருந்து தொடங்குங்கள் என்று கூறியிருந்ததாக ஆதவ் கூறினார்.
வி எழுத்தில் தொடங்கும் தொகுதிகள் இல்லாமல் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம். திமுகவின் கோட்டையாக பெரம்பூர் தொகுதி சொல்லப்படுகிறது. எப்படியாவது இங்கு விஜய்யை போட்டியிட வைத்து ஜெயிக்க வைக்க வேண்டும் என தவெகவினர் முடிவு செய்துள்ளனர். ஆனால் திமுக கோட்டையில் விஜய்யால் மோதி பார்க்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.
-
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
என்னது திமுகவுக்கு வாழ்த்தா? பெரம்பலூர் நாம் தமிழர் வேட்பாளரை மாற்றிய சீமான்.. என்ன நடந்தது? -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்!












Click it and Unblock the Notifications