வெறும் ஆயிரம் ரூபாய்க்கே மக்கள் விழுந்து விடுவார்களா.. தப்புக் கணக்கு போடுகிறதா அதிமுக?
பொங்கல் பரிசாக 1000 ரூபாயை எதற்காக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்?
Recommended Video

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு தருவது வருங்கால அரசியலில் லாபத்தை ஈட்டித்தரும் என்று ஆளும் தரப்பு கணக்கு போடுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக பொங்கல் பரிசாக, இலவச வேட்டி, சேலையுடன் அரிசி, வெல்லம் போன்ற பொருட்களை ரேஷனில் தருவார்கள். இதுதான் இத்தனை காலமாக நடந்து வந்தது.
ஆனால் எந்த வருடமும் இல்லாத வகையில், இந்த முறை அதிரடியாக, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும், 1000 ரூபாய் பரிசுப் பணம் என்று அறிவிக்கப்பட்டது விவாத பொருளாகி விட்டது.

தள்ளுமுள்ளு மரணம்
ஒரு பக்கம் இதை வாங்குவதற்காக, ரேசன் கடைகளில், மக்களிடையே, தள்ளு முள்ளு ஏற்பட்டு மரணம் வரை போய்விட்டது. மற்றொரு பக்கம் அரசின் நிதியிலிருந்து இந்த பணத்தை ஏன் வழங்குகிறீர்கள், கட்சி பணத்தை செலவு செய்வதுதானே? என்று கோர்ட் சாட்டையடி கொடுத்துள்ளது.

ஏன் பணம் தரவில்லை?
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் "இது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது, மக்கள்தான் இதனை தீர்மானிக்க வேண்டும். பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில்தான் பணம் தரப்படுகிறது என்கிறார். அப்படியானால் இத்தனை வருஷங்களாக வந்து போன பொங்கலுக்கு ஏன் அரசு பணம் தரவில்லை என்ற கேள்வி எழுகிறது.

எதற்காக இத்திட்டம்?
இதேபோல, அடுத்தடுத்து பல திட்டங்களையும் செயல்படுத்தி அடித்தட்டு மக்களை கவர ஆளும் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எதற்காக இப்படி ஒரு திட்டம்? எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் கோர்ட் வரை சென்று போராடி கொண்டிருக்க காரணம் என்ன? என விளங்கவில்லை. இலவசங்கள் எதற்கு என்று நீதிமன்றம் நேற்று எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

விடிவு எப்போது?
தமிழகத்தில் நல்ல சாலைகள், குடிநீர் வசதிகள் இன்றும் சரிவர இல்லாத பகுதிகள் நிறைய இருக்கின்றன. இவ்வளவு காலம் ஆகியும் உள்ளாட்சி தேர்தலை கூட நடத்த அரசால் முடியாமல் உள்ளது. இதை நடத்தினால்தான் மத்திய அரசு நிதியும் நமக்கு கிடைக்கும், அதன்மூலம்தான் கிராமங்களுக்கு விடிவு பிறக்கும்.

எதற்காக ரூ.1000
இன்னும் கஜாபுயல் நிவாரணங்கள் முழுசாக போய் சேரவில்லை. புயலால் பாதிக்கப்பட்டவர்களும் மீண்டு வர முடியவில்லை. ஆனால் இது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, 1000 ரூபாயை தருகிறோம் என்று ஆளும் கட்சி சொல்வது எதற்காக? வெறும் 1000 ரூபாயில் நம் மக்கள் விழுந்து விடுவார்களா? அல்லது 1000 ரூபாயில் மேற்கண்ட குறைகளும், அதிருப்திகளும் ஈடுகட்டப்படுமா?

இலவச மோகம்
ஆனால் மக்களை இன்னமும் ஏமாந்த சோணகிரியாகவும், இலவசம் மோகம் பிடித்து ஆடும் பிம்பமாகவும் நினைத்தால், அது அப்படி நினைப்பவர்களுக்கு எதிராகவே திரும்பும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்தால் சரி.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications