பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசின் மக்கள் நலத் திட்டங்களை விரைவாகவும் எளிதாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருவாய் துறையின் சேவைகளை மேலும் துரிதப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை இன்று நடத்துகிறோம். குறிப்பாக சாதிச் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை மற்றும் சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் சிரமமின்றி பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.

ஆன்லைன் விண்ணப்பப் பதிவுகளில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டார அதிகாரிகள் மற்றும் விஏஓக்கள் ஆய்வு செய்து 5 நாட்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பணிகள் முடிக்கப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
அரசு நிலங்கள் குறித்த விவரங்கள், அவற்றின் பயன்பாடு மற்றும் பட்டா மாறுதல் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களை சரிசெய்வது தொடர்பாகவும் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
பேரிடர் மேலாண்மை பணிகளுக்காக தமிழகம் ரூ.1000 கோடி நிதி கோரியிருந்த நிலையில், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
முதல்வர் விஜயின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், "அறிவிப்புகளை வெளியிடுவது மட்டுமல்லாமல், அவை நடைமுறையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறதா என்பதில்தான் முதல்வரின் முழு கவனமும் உள்ளது. பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதைக் காட்டிலும் மக்கள் பயனடைகிறார்களா, அவர்கள் திருப்தியடைகிறார்களா என்பதையே அவர் முக்கியமாகக் கருதுகிறார்" என்றார்.
மேலும், மாரிதாஸ் கைது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த வழக்கின் சட்ட ரீதியான விவரங்கள் குறித்து தனக்கு தெளிவான தகவல் இல்லை என்று கூறினார். அதேசமயம், பத்திரிகை சுதந்திரம் என்பது தனிநபர் விமர்சனங்களைத் தாண்டி சமூக வளர்ச்சி மற்றும் மக்கள் நலப் பணிகளை முன்னிறுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
-
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான் -
தமிழக அரசியலில் விஜய்யின் புதிய 'ஃபார்முலா'.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் ஏன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்? -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைத் திட்டம் எப்போது தொடக்கம் தெரியுமா? இதோ வந்தாச்சு தகவல்












Click it and Unblock the Notifications