டார்க்கெட் செய்யப்படும் சென்னை மேயர் பிரியா ராஜன்.. பதிலடி கொடுக்கும் திமுக.. என்ன பிரச்சனை?
சென்னை: சென்னை மேயர் பிரியா ராஜன் வீட்டினை நேற்று மின்சாரம் கேட்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வீடியோவை வைத்து அவரை சமூக ஊடகங்களில் சிலர் டார்க்கெட் செய்து விமர்சித்து வருகிறார்கள்.
சென்னை மேயர் பிரியா ராஜன் வீட்டினை நேற்று மின்சாரம் கேட்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அந்த வீடியோவில் ஒரு பெண் ஆவேசமாக கேள்வி எழுப்புவார். அதற்கு அமைதியாக பதில் அளித்து கொண்டிருப்பார் பிரியா ராஜன்.. இந்த வீடியோவை சிலர் வேகமாக பரப்பி, பிரியா ராஜனை டார்க்கெட் செய்து விமர்சித்து வருகிறார்கள். இதற்கு திமுக ஐடிவிங்கும் பதிலடி கொடுத்து வருகிறது.

மிக் ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த ஞாயிறு அன்று மழை தொடங்கியதில் இருந்தே மேயர் பிரியா ராஜனை பலர் விமர்சித்து வருகிறார்கள். அவருடைய பேட்டி வீடியோக்களை போட்டு, தமிழை தடுமாற்றத்துடன் பேசுவதாக சிலர் விமர்சித்தார்கள். ஆனால் இதற்கு கடுமையான எதிர்வினை ஆற்றிய திமுக ஐடி விங்க் குழுவினர், ஒருவரின் செயல்களை தான் பார்க்க வேண்டும், மொழியை பார்க்க கூடாது பதிலடி கொடுத்தனர்.

அதன்பின்னர் மழை தீவிரமான நிலையில் மேயர் பிரியா ராஜன் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்ததை புகழ்ந்து திமுகவினர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டனர்.. அதற்குமே பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் கடும் பதிலடி கொடுத்தனர். இதனிடையே மேயர் பிரியா ராஜனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தீவிரமாக கண்காணிக்கும் எதிர்க்கட்சியினர், மக்கள் போராட்டங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அப்படித்தான் சென்னை மேயர் பிரியா ராஜன் வீட்டினை நேற்று மின்சாரம் கேட்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அந்த வீடியோவில் ஒரு பெண் ஆவேசமாக 'நாங்க யாரும் சாவல மேடம் பால் ஊத்தறதுக்கு' என்று கேட்பார். அதற்கு மேயர் பிரியா ராஜன், அவர்களை சமாதானம் செய்தபடி, மின்சாரமும் ஏன் இன்னும் தராமல் உள்ளார்கள் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
நெறையா வீட்டுக்குள்ள ஷாக் வருது, ஷாக் அடித்து உயிர் போனால் கஷ்டம், அதுனால தான் கரெண்ட் கட் பண்ணி வச்சிருக்காங்க.. இன்று ((நேற்று மாலை) மாலைக்குள் கரெண்ட் கொடுத்து விடுவார்கள் என்று பொறுமையாக கூறினார். இந்த வீடியோவை எடுத்து பாஜக மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் பிரியா ராஜனுக்கு எதிராக கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இதற்கு திமுக ஐடி விங்க் நிர்வாகிகள், திமுக ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இடதுசாரிகளும் அதிமுக மற்றும் பாஜகவினருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "இயற்கை பேரிடராக இருந்தாலும் மக்களுக்கு பதில் சொல்ல அரசியல் தலைவர்கள் கடமைப்பட்டவர்களே. அதற்குத்தான் நிர்வாகம் உள்ளது. ஆனால், தானே ஒரு பேரிடராகவும், ஊடகங்களை கண்டால் Oh My God என ஓடிவிடுபவராகவும் இருப்பவரை தலைவராக வைத்துக் கொண்டு இப்படி பதிவு செய்ய வெட்க உணர்வு வேண்டாமா?." என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications