அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் நியமிக்கப்பட்ட மூன்று முக்கிய நியமனங்கள் மற்றும் ரத்தான ஒரு நியமனம் ஆகியவை கோட்டை அதிகாரிகள் மத்தியில் கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவம், ஆட்சியின் உள்கட்சி மோதலின் ஆழத்தை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

முதலமைச்சர் விஜய்யின் அலுவலகப் பொறுப்பில் ஓ.எஸ்.டி. (Officer on Special Duty) பதவியில் அவரது ஆஸ்தான ஜோதிடரான ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டார். இந்த பதவியின் முக்கியப் பணி, அரசு நிர்வாகத்தின் உண்மை நிலவரங்களை அதிகாரிகளின் உதவியுடன் முதலமைச்சருக்கு நேரடியாகத் தெரிவிப்பதாகும். அதே நேரத்தில், அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கிய சாமியும், முதலமைச்சரின் பொது நிகழ்வுகளைக் கவனித்துக்கொள்ளும் ஆலோசகராக விஜய்யின் நெருங்கிய தொழிலதிபர் விஷ்ணு ரெட்டியும் நியமிக்கப்பட்டனர். இந்த மூன்று நியமன உத்தரவுகளும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டன.

Vijay tvk

ஆனால், ஜோதிடர் ரத்தன் பண்டிட்டின் நியமன உத்தரவு மட்டுமே முதலில் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இதற்குப் பின்னால் உள்ள காரணம், ஜான் ஆரோக்கிய சாமி மற்றும் விஷ்ணு ரெட்டியின் தந்திரமான திட்டமிடலாகக் கூறப்படுகிறது. இவர்களின் பின்னணியில் இருப்பவர் ஆதவ் அர்ஜுனா என்கின்றன அதிகார வட்டாரங்கள். அரசு நிர்வாகத்தை தங்களின் அதிகார வட்டத்துக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்த மூவரின் முக்கிய நோக்கமாக இருந்தது.

ஜோதிடர் ரத்தன் பண்டிட் முதலமைச்சர் விஜய்யின் நேரடி பார்வையில் இருப்பதால், நிர்வாகக் கட்டுப்பாடு அவருக்கு செல்லும் பட்சத்தில் தங்களுக்கு முக்கியத்துவம் குறையும் என்பதை உணர்ந்த இந்த கோஷ்டி, உடனடியாக ஆதவ் அர்ஜுனாவுடன் ஆலோசனை நடத்தியது. அதில் எடுக்கப்பட்ட முடிவு தான் ஜோதிடரின் நியமனத்தை வேண்டுமென்றே சர்ச்சைக்குள்ளாக்கி ரத்து செய்ய வேண்டும் என்பதாகும்.

உத்தரவு வெளியான உடனேயே, அவர்களின் ஊடகத் தொடர்புகள் மற்றும் சமூக ஊடக இன்ஃப்ளுயன்சர்கள் மூலம் "அரசு நிர்வாகத்தில் ஜோதிடரை அனுமதிப்பதா? இதுதான் மக்களுக்கு வழங்கிய மாற்றமா? மூடநம்பிக்கையை அரசு ஊக்குவிக்கிறதா?" என்கிற கேள்விகள் பரவலாக எழுப்பப்பட்டன. இந்த விவாதங்கள் தமிழக எதிர்க்கட்சிகளாலும் உடனடியாக கையில் எடுக்கப்பட்டன. சட்டமன்றத்தில் ஜோதிடர் நியமனத்துக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன.

எதிர்பார்த்தபடியே சர்ச்சை பெரிய அளவில் வெடித்தது.

இந்த அழுத்தத்தை முதலமைச்சர் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு சென்று, ஜோதிடரின் நியமனத்தை ரத்து செய்ய வைத்தது இந்த மூவர் கோஷ்டி. இந்த நகர்வு வெற்றியடைந்ததாகவே அவர்கள் கருதுகிறார்கள்.
கோட்டை அதிகாரிகள் மத்தியில் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக மதிய உணவு இடைவேளையின்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இதைப் பற்றி பேசிக்கொள்வது வழக்கமாகிவிட்டது. "கடந்த வாரம் கோட்டையில் லஞ்சில் எதிரொலித்த ஹைலைட் சமாச்சாரம் இதுதான்" என அதிகாரிகளின் பி.எஸ்.ஓ.க்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தவெக ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே உள்கட்சி அதிகாரப் போட்டி தீவிரமடைந்திருப்பதை உணர்த்துகிறது. முதலமைச்சர் விஜய்யின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுக்கு இடையேயான போட்டி, நிர்வாகத்தின் செயல்பாட்டை எப்படி பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை மேலும் விஸ்வரூபம் எடுக்க முயற்சிக்கின்றன. "ஜோதிட ஆலோசனையில் அரசு நடத்தப்படுவதாக" குற்றம் சாட்டும் அவர்கள், இந்த ரத்து முடிவை "மக்கள் அழுத்தத்துக்கு அரசு தலை வணங்கியது" எனக் கொண்டாடுகின்றனர்.

ஆனால் அதிகார வட்டாரங்கள் மற்றொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. ஜோதிடர் ரத்தன் பண்டிட் மீதான நம்பிக்கை முதலமைச்சருக்கு இன்னும் இருப்பதாகவும், இந்த ரத்து முடிவு தற்காலிகமானது மட்டுமே என்பதும் பேசப்படுகிறது.

தவெக ஆட்சியின் முதல் சில மாதங்களிலேயே வெளிப்பட்ட இந்த உள்கட்சி சூழ்ச்சி, வரும் நாட்களில் மேலும் பல சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் அஞ்சுகின்றனர். மக்கள் எதிர்பார்க்கும் வெளிப்படையான, தூய்மையான நிர்வாகம் அமையுமா? அல்லது அதிகாரப் போட்டிகளால் ஆட்சி பலவீனப்படுமா? என்பதை நேரம் தான் பதில் சொல்லும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+