உங்க வீட்டில் குழந்தைங்க இருக்காங்களா? அனைத்து அரசு பணிகளுக்கும் இந்த ஒரு ஆவணம் தேவை.. உடனே போங்க
சென்னை: உங்கள் வீட்டில் 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு என்று தனியாக நீல நிற ஆதார் அட்டை எடுக்கலாம். இந்த ஆதார் அட்டைதான் பல்வேறு அரசு ரீதியான பணிகளை முடிக்க உதவும்..
நீல நிற ஆதார் அட்டை என்பது பால ஆதார் அட்டை என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக குறிப்பாக வழங்கப்படும் ஆதார் அட்டை ஆகும். பெரியவர்களுக்கு வழங்கப்படும் வழக்கமான ஆதார் அட்டையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இது நீல நிறத்தில் உள்ளது.

நீல நிற ஆதார் அட்டை ஏன் வேறுபட்டது? : பயோமெட்ரிக் தரவு (கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன்) சேகரிக்கப்படும் வழக்கமான ஆதார் அட்டையைப் போலல்லாமல், நீல ஆதார் அட்டைக்கு குழந்தையிடமிருந்து எந்த பயோமெட்ரிக் தகவலும் தேவையில்லை.
ஏனெனில் சிறு குழந்தைகளிடமிருந்து பயோமெட்ரிக் தரவுகளை சேகரிப்பது சவாலானது மற்றும் நம்பமுடியாதது. அதற்குப் பதிலாக, குழந்தையின் UID (தனித்துவ அடையாள எண்) அவர்களின் மக்கள்தொகைத் தகவல் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரின் UID உடன் இணைக்கப்பட்ட முகப் புகைப்படத்தின் அடிப்படையில் இந்த கார்டு உருவாக்கப்படுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது: இதற்கு எளிதாக விண்ணப்பிக்க முடியும். ஆதார் பதிவு மையத்தைப் பார்வையிடவும், உங்களுக்கு அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தைக் கண்டறியவும். UIDAI இணையதளத்தில் (https://uidai.gov.in/) மையங்களின் பட்டியலைக் காணலாம்.
இணையத்திலேயே இதற்கான புக்கிங் செய்யலாம். அல்லது அதிலேயே பார்ம் டவுன் லோடு செய்து அதை நிரப்பி ஆதார் அலுவலகத்தில் கொடுக்கலாம். இல்லையென்றால் பதிவு மையத்தில், நீங்கள் ஆதார் பதிவுப் படிவத்தை நிரப்ப வேண்டும். யுஐடிஏஐ இணையதளத்தில் இருந்து படிவத்தை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதன்பின் குழந்தையின் UID (தனித்துவ அடையாள எண்) அவர்களின் பிறப்பு அடையாள விவரம், மக்கள்தொகைத் தகவல் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரின் UID உடன் இணைக்கப்பட்ட முகப் புகைப்படம் ஆகியவற்றை கொடுக்கலாம்.
அதன்பின் 5 வயது தாண்டியதும் ப்ளூ ஆதார் அட்டைக்கு பதிலாக சாதாரண ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இது போக ஆதாரிலேயே 4 வகையான ஆதார் உள்ளன. ஒன்று சாதாரண ஆதார்.
ஆதார் லெட்டர் வகை: இது ஒரு லெட்டர் அடிப்படையிலான லேமினேட் செய்யப்பட்ட ஆதார் கடிதம் ஆகும். இதில் ஆதார் அட்டை கொடுக்கப்பட்ட வெளியிடப்பட்ட தேதி மற்றும் QR குறியீடு இருக்கும். புதிய பதிவு அல்லது பயோமெட்ரிக் மாற்றம், மொத்தமாக ஆதார் புதுப்பிப்பு செய்யப்பட்டால், புதிய ஆதார் அட்டை சாதாரண தபால் மூலம் மக்களுக்கு அனுப்பப்படும். ஆதார் கடிதத்தை அது வரை தாற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதே சமயம் இந்த ஆதார் கடிதம் இருந்தால் மட்டுமே தபாலில் வரும் கார்டை வாங்க முடியும்.
eAadhaar: eAadhaar என்பது ஆதாரின் மின்னணு வடிவமாகும். இது UIDAI ஆல் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டது. இதில் பாதுகாப்பான QR குறியீடு இடம்பெற்று இருக்கும். அதேபோல் ஆன்லைனில் திறக்க கடவுச்சொல் கொடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் eAadhaar/masked eadhaar ஐ எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். அதற்கு ஓடிபி வரும். eAadhaar/masked eAadhaar பொதுவாக ஆதார் கார்டில் உள்ள கடைசி 4 இலக்கங்களை மட்டுமே காட்டும்.
ஆதார் பிவிசி கார்டு: ஆதார் பிவிசி கார்டு என்பது UIDAI ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதாரின் சமீபத்திய வடிவமாகும். எடுத்துச் செல்ல எளிதானது மற்றும் வலிமையானது. PVC-அடிப்படையிலான ஆதார் அட்டையானது டிஜிட்டல் முறை மூலம் கையொப்பமிடப்பட்ட ஆதார் ஆகும். இது டேம்பர் ப்ரூஃப் கொண்டது. அதேபோல் தண்ணீரில் விழுந்தாலும் வீணாகாது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications