Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல்லாவரம் அருகே கோபித்துக் கொண்டு போன ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மனைவி.. இப்படியா ஆகணும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக ஜோசப் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி டெய்சி ராணி கடந்த 21-ந் தேதி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாராம். போகும் போது செல்போனை எடுத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மாயமான பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மனைவி, பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த கோலம் உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக ஜோசப் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி டெய்சி ராணிக்கு 41 வயது ஆகிறது. ஜோசப் மற்றும் டெய்சி ராணி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Wife of missing panchayat vice-chairman near Pallavaram rescued from Besant Nagar beach

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 21-ந் தேதி வீட்டில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாம். இந்த சண்டையில் டெய்சி ராணி, கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாராம். மேலும் டெய்சி ராணி செல்போனையும் வீட்டிலேயே வைத்து விட்டு வெளியே சென்றுவிட்டாராம். அதன்பிறகு அவர் வீடு திரும்பி வரவில்லை. அக்கம் பக்கம், உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் அவரை காணாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், சங்கர்நகர் காவல் நகர் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான டெய்சிராணியை தேடி வந்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் வரை ஆட்டோவில் ஏறிச்சென்ற டெய்சி ராணி, பல்லாவரம் பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு ஆட்டோவில் ஏறி சென்றதும், அந்த ஆட்டோ, கிண்டி வழியாக பெசன்ட் நகர் சென்றதையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த ஆட்டோ பதிவு எண் மூலம் ஆட்டோ டிரைவரை கண்டுபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர், பெசன்ட் நகர் தேவாலயம் அருகே டெய்சிராணியை இறக்கி விட்டதாக கூறினார். இதையடுத்து பெசன்ட் நகர் தேவாலய பகுதி, கடற்கரை, மெரினா கடற்கரை பகுதியில் சங்கர் நகர் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார்கள்.

இந்தநிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் பெண் உடல் கரை ஒதுங்கி இருந்தது.இதுபற்றி அந்த பகுதி மக்கள் பெசன்ட் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிணமாக கரை ஒதுங்கியது மாயமான டெய்சிராணி என்பது தெரியவந்தது. அவரது உறவினர்களும், அந்த உடலை பார்த்து அது டெய்சி ராணிதான் என அடையாளம் காட்டினர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வீட்டில் கோபித்துக்கொண்டு ஆட்டோவில் பெசன்ட்நகர் சென்ற டெய்சிராணி, கடலில் குதித்து உயிரை விட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் இதுபற்றி சங்கர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டில் இருந்து மாயமான ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மனைவி, பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பொழிச்சலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+