"சங்கராச்சாரியா"ன்னு நினைப்பா.. தபேலா எடுத்து அடித்தால் இசைஞானியா"..ஈவிகேஎஸ் இப்படியெல்லாம் பேசலாமா
இளையராஜாவை தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: "தபேலா எடுத்து அடிப்பவன் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது.. அவர் மனசுக்குள் மனதிற்குள் இளையராஜாவுக்கு சங்கராச்சாரியார் என்ற நினைப்பா?" என்று சர்ச்சையாக ஈவிகேஎஸ் விமர்சித்துள்ளார்.. சாதியை வைத்து விமர்சித்ததால், இளங்கோவன் பேச்சு சர்ச்சையாகி உள்ளதுடன், சட்ட நடவடிக்கை பாயுமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
Recommended Video
அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பேசியிருந்த நிலையில், பெரும்பாலான மக்கள் தங்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தினார்கள்.. கண்டனங்களை பதிவிட்டுள்ளனர்.
மொத்தத்தில் இளையராஜா, தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள்..

இளங்கோவன்
இப்படிப்பட்ட சூழலில், முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இளையராஜாவை சரமாரி விமர்சித்துள்ளார். ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் ஈவிகேஎஸ் பேசியதாவது: "பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்கிறாங்க.. கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று சொல்லி கொள்கிறார்கள், இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது.

இளையராஜாவாம்?
வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும் புகழும் வந்தபிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக் கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கே தெரியும்.. இளையராஜா வா? வயது 80க்கு மேல் ஆகப்போகிறது கேட்டால் இளையராஜாவாம்.. ஆரம்பத்தில், தொழிலாளர்களின் நலன் குறித்து பாடிய நீ, பணமும் புகழும் வந்தவுடன் மேலும் பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் நீ திடீரென பக்திமான் ஆகிவிட்டாய்... பக்திமான் ஆகலாம் அதனால் தவறு என்று சொல்ல மாட்டேன்...

ஒப்பீடு நியாயமா?
அது உங்கள் விருப்பம். உங்கள் விருப்பத்தில் நான் எப்படி தலையிட முடியும்? அது போல எங்கள் விருப்பத்திற்கு நீ மரியாதை கொடு. அதைவிடுத்து அம்பேத்கர் போன்றவர்களுடன் மோடியை ஒப்பிடுவது என்ன நியாயம்? ஓர் அரசிடம் உதவிப் பெற்று படித்த அம்பேத்கர், அப்படியே மேல்நோக்கிப் போயிருக்கலாம்.. ஆனால் வெளிநாடுகளில் சென்று படித்துவிட்டு, இழிநிலையில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைக்கவேண்டும் என்று கடைசி வரை உழைத்தவர், இந்த நாட்டிற்கு அரசியலமைப்பு வகுத்துக் கொடுத்தவர் அவர்..

கேடித்தனம்
அவருடன் மோடியுடன் ஒப்பிட்டு கேடி தானம் செய்யலாமா? இன்னும் சொல்லப்போனால் மோடியை பெரியாருடன் ஒப்பிடகூட தயங்கமாட்டார்கள். மோடியும், பெரியாரும் ஒன்று; இரண்டு பேரும் தாடி வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால், என்ன நியாயம்? உனக்கு ஒப்பிடவேண்டும் என்று ஆசையிருந்தால், ஹிட்லரோடு மோடியை ஒப்பிடு. முசோலினியோடு மோடியை ஒப்பிடு.. இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவரை ஏன் இப்படி அசிங்கம் செய்கிறீர்கள்?

சங்கராச்சாரியார்
ஆனால், இந்த நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர்களை நீங்கள் அசிங்கம் செய்யவேண்டும் என்று நினைத்தால், அதில் என்ன நியாயம் இருக்கிறது? இளையராஜாவிற்கு ஒருமுறை அடிபட்டால் போதாது என்று நினைக்கின்றேன்.பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னவர்தான் இந்த இளையராஜா, அவர் மனதிற்குள் சங்கராச்சாரியார் என்று நினைப்பு. சங்கராச்சாரியாரையே ஜெயிலுக்குள் தள்ளிய காலம், இந்தக் காலம்" என்று பேசியுள்ளார்.

இளங்கோவன்
இந்த பேச்சுதான் சர்ச்சையை கிளப்பி விட்டு வருகிறது.. சாதியை குறிப்பிட்டு பேசியதால், கண்டனங்கள் குவிகிறது.. இவர் மீது பிசிஆர் சட்டம் பாயுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.. ஈவிகேஎஸ் இளங்கோவனை பொறுத்தவரை, யாராக இருந்தாலும் வெளிப்படையாக பேசி பல முறை சர்ச்சையில் சிக்கியவர்.. ஒருமுறை மறைந்த ஜெயலலிதா பற்றியும், பிரதமர் மோடி குறித்தும் மிகவும் அருவருக்கதக்க வார்த்தைகளால் பேசியதை இந்த தமிழகமே கேட்டது.. சில சமயம் முகம் சுளிக்கும் அளவுக்கும் இவரது விமர்சனங்கள் எல்லை மீறிவிடுவதும் உண்டு.

சங்கராச்சாரியார்
சொல்ல வரும் கருத்தும், பேச்சும், நிலைப்பாடும், சரியே என்றாலும், தடித்த வார்த்தைகள் காரணமாக பல சமயங்களில் இளங்கோவன் சிக்கி கொண்டுள்ளார்.. இளையராஜா விஷயத்தில், பெரும்பாலானோருக்கு எதிர்ப்பு கருத்துக்கள் இருந்தாலும், அரசியல் நாகரீகம் மிகவும் அவசியம் என்பதை, பாரம்பரியமான திராவிட குடும்பத்தை சேர்ந்த இளங்கோவனுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகவே தெரிகிறது..!
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications