Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகலா? அழைப்பிதழில் வெளிவந்த சீக்ரெட்.. காளியம்மாள் பரபர விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாதகவில் இருந்து விலகும் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவுள்ள காளியம்மாள், அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழில் நாதக பொறுப்புகளை போடவில்லை. சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், ஏற்கனவே விலகிவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தவெகவில் இணைவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. இதனிடையே நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து ஏராளமானோர் விலகுவதாக அறிவித்தனர்.

NTK Seeman Kaliammal

கடந்த 6 மாதங்களில் நாதகவில் இருந்து விலகுவோரின் தொடர்பான செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகிறது. இதனிடையே நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாளை கடுமையாக பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியது. இந்த ஆடியோ வெளியாகும் முன்பே காளியம்மாள் நாதக கட்சி நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

இதனால் நாதகவில் இருந்து காளியம்மாள் விலகுவதாக தகவல் வெளியாகியது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் காளியம்மாள். அந்த தேர்தலில் காளியம்மாளின் அதிரடி பேச்சும், பிரச்சாரமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த தேர்தலில் தோல்வியடைந்தாலும், காளியம்மாள் செயல்பாடுகள் தொடர்ந்து கவனம் பெற்றது.

தற்போது காளியம்மாள் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். சீமான் உடனான கருத்து வேறுபாடு காரணமாக நாதகவில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியது. அதேபோல் தவெகவில் விரைவில் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே நடக்கும் நிகழ்ச்சியின் அழைப்பிதழில் காளியம்மாள் பெயர் இடம்பெற்றுள்ளது.

காளியம்மாள் பெயருக்கு கீழ் நாதக பொறுப்பு இடம்பெறாமல், சமூக செயற்பாட்டாளர் என்ற அடைமொழி இடம்பெற்றுள்ளது. இதே நிகழ்ச்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர். இதனால் காளியம்மாள் நாதகவில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த அழைப்பிதழ் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

இதுகுறித்து காளியம்மாள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் நாதகவில் இருந்து விலகிய பின் எந்த கட்சிக்கு காளியம்மாள் சென்று இணைவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+