ஞாபகம் இருக்கா சஞ்சய் பாபா?.. எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணையா.. கொடநாடு கேஸில் திடீர் திருப்பம்
கொடநாடு வழக்கை விசாரித்த நீதிபதி டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமியிடம் கொடநாடு குறித்த விசாரணை நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வரும் நிலையில், புது திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
சசிகலாவிடம் இரண்டு நாள் விசாரணையை தனிப்படை போலீஸார் முடித்துக் கொண்ட நிலையில், ஒரு சில தகவல்கள் மட்டும் வெளியே கசிந்தது.
எடப்பாடி பழனிசாமி குறித்து, முக்கிய தகவல்கள் சிலவற்றை அதிகாரிகளிடம் சொன்னாராம் சசிகலா.. அதுதான் அதிமுக மேலிடத்துக்கு புளியை கரைத்து கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
அதேபோல, இந்த விசாரணையில் தன்னைப் பற்றி என்ன சொன்னார் என்பதை அறிய முயற்சித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக, அதிமுக ஆட்சியில் மாநில உளவுத்துறையில் உயரதிகாரியாக இருந்தவரின் உதவியை அவர் நாடியிருக்கிறார்.. அதேபோல, தனது ஆட்சியின் போது முக்கிய பொறுப்புகளில் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் அணுகியிருக்கிறார். இரண்டு தரப்பிலுமிருந்து அவருக்கு கிடைத்த தகவல் ஒரே மாதிரி இருந்தது.

கொடநாடு
அதாவது, கொடநாடு சம்பவத்தின் போது ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களின் உதவியில்லாமல் அந்த பங்களாவில் நுழைய யாருக்கும் துணிச்சல் வந்திருக்காது.. இந்த விசாரணையின் இறுதிக் கட்டத்தில் நீங்களும் விசாரிக்கப்படுவீர்கள், அதற்கான திட்டமிடலும் போலீசாரிடம் இருக்கிறது" என்று சொல்லி உள்ளதாக செய்திகள் கிசுகிசுத்தன.

எதிர்பார்ப்பு
ஆகவே, சசிகலாவிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், எந்நேரமும் எடப்பாடியிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாகவே ஏற்பட்டு வருகிறது.. அதற்கேற்றபடி, ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்களிடமும், அதிமுகவை சேர்ந்தவர்களிடமும் விசாரணை வேகம் எடுத்து வருகிறது.. நேற்று அதிமுகவை சேர்ந்த சஜீவனிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.. சஜீவன் அதிமுக மாநில வர்த்தக அணி பொறுப்பாளராக இருந்து வரும் நிலையில், இவரிடம் நடத்தப்பட்ட விசாரணை முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.

எடப்பாடியிடம் விசாரணை?
இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, நீதிபதி இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.. இந்த வழக்கு, ஊட்டி கோர்ட்டில், நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில்தான் இத்தனை காலமுமாக நடந்து வருகிறது... தமிழகத்தில் 58 நீதிபதிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட நிலையில், கொடநாடு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சய்பாபாவும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.. இவர்தான் இந்த வழக்கை அப்போதிருந்தே விசாரித்து கொண்டிருக்கிறார்.. இவர்தான் சில முக்கிய உத்தரவுகளையும் இந்த வழக்கில் பிறப்பித்தவர்..

முருகன்
வழக்கு கடந்த 10 நாட்களாக சூடுபிடித்து வரும் நிலையில், இவரை ஏன் மாற்றம் செய்தார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. இவரை தேனி முதன்மை மாவட்ட நீதிபதியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக முருகன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்... இவர்தான் இனிமேல் கொடநாடு கேஸை விசாரிக்க போகிறவர்.. எனினும் சஞ்சய் பாபா மாற்றம் ஏன் நடந்தது என்பதுதான் பரவலான சந்தேகமாக உள்ளதாம்..!












Click it and Unblock the Notifications