மீண்டும் கோவையை குறிவைக்கும் கமல்.? வந்து விழுந்த கேள்வி.. ஒரே வரியில் நறுக் பதில்.. என்ன சொன்னார்
சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான கமல் தனது மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் கோவையில் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் கமல்ஹாசன்.. திரைத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்த இவர், கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

கட்சியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே நடைபெற்ற 2019 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் களமிறங்கியது. எந்தவொரு இடத்திலும் வெல்லவில்லை என்றாலும் 3.6% வாக்குகளைப் பெற்றது. நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யத்திற்குக் கணிசமான வாக்குகள் வந்தது.
மக்கள் நீதி மய்யம்: அதைத் தொடர்ந்து நடந்த 2021 சட்டசபைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களமிறங்கியது. தனித்துப் போட்டியிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொண்டார் கமல். இதில் எந்தவொரு தொகுதியிலும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களால் வெற்றி பெற முடியவில்லை. அதேநேரம் 180 தொகுதிகளில் போட்டியிட்டு 2.62% வாக்குகளைப் பெற்றிருந்தார்கள்.
இந்தச் சட்டசபைத் தேர்தலில் நடிகர் கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கினார். அங்கே பாஜகவின் வானதி சீனிவாசனுக்கும் இவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையில் இருவரும் மாறி மாறி முன்னிலையில் இருந்தனர். கடைசியில் வெறும் 1700 வாக்குகள் வித்தியாசத்தில் கோவை தெற்கு தொகுதியில் கமல் தோல்வியடைந்தார். அதன்பிறகு நடிப்பில் படு பிஸியான கமல் "விக்ரம்" என்ற மெகா ஹிட் படத்தைக் கொடுத்தார். இப்போதும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.

கமல்: இந்தச் சூழலில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கான வேலையைத் தொடங்கியுள்ளது. அதன்படி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவையில் ஆலோசனை நடத்தினார். கோவை சின்னியம்பாளையத்தில் தனியார் மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கோவை, சேலம் மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 500 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல், "இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். அதை இப்போது சொல்ல முடியாது. இறையாண்மைக்கு ஆபத்து என யார் அழைத்தாலும் செல்வேன். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு ராகுல் காந்தி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்" என்றார்.
மீண்டும் போட்டி? சட்டசபையில் விட்ட இடத்தை பிடிக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, "நல்ல எண்ணம் தானே" என்று பதிலளித்தார்.. வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் மக்களவை தேர்தலில் நல்ல முடிவு ஏற்பட இப்போது முதலே வேலை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்,
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications