எரியுதடி மாலா.. ஃபேனை "போடாத".. நீண்ட நேரம் இரவில் ஃபேனில் தூங்கினால்.. இவ்வளவு பிரச்சனை வருமா?
சென்னை: தமிழ்நாடு முழுக்க கடுமையான வெயில் அடித்து வரும் நிலையில்.. பலரும் இரவு முழுக்க ஃபேனில் தூங்குவதை வழக்கமாக வைத்து இருப்பார்கள். சிலர் டேபிள் ஃபேன், பெடஸ்டல் ஃபேன் போட்டு இரவு முழுக்க தூங்குவதை வழக்கமாக வைத்து இருப்பார்கள்.
இது போல இரவு முழுக்க ஃபேனில் தூங்குவதால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் ரீதியாக சில பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அவை என்ன மாதிரியான பாதிப்புகள் என்று இங்கே பார்க்கலாம்.

ஃபேன்கள் பொதுவாக காற்றை மட்டும் கொடுக்காது. மாறாக விசிறிகள் தூசி, தூசிப் பூச்சிகள், மாசுக்கள், துர்நாற்றம் மற்றும் பிற ஒவ்வாமைகளை அறையில் பரப்பும். அறையில் ஏற்கனவே இருக்கும் மோசமான காற்றை மீண்டும் மீண்டும் சுழற்சி செய்யும். இவற்றை உள்ளிழுப்பது ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
அதிகப்படியான தும்மல், மூக்கு ஒழுகுதல், கண்களில் நீர் வடிதல், தொண்டை அரிப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற எதிர்விளைவுகளைத் தூண்டலாம். நீங்கள் ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் இந்த ஒவ்வாமை உங்கள் அறிகுறிகளை மோசமாக்கலாம்.
சிலருக்கு இரவு முழுக்க ஃபேனில் தூங்கியும் கூட கடுமையாக வியர்வை ஏற்படும். சிலருக்கு உடல் முழுக்க சிவப்பு சிவப்பாக புள்ளிகள் ஏற்படும். இதெல்லாம் ஃபேன் காரணமாக ஏற்படும் ஒவ்வாமைகள் ஆகும்.
பழைய மெத்தைகளில் தூங்கும் போதும் இதேபோல் கடுமையான ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மெத்தைகளில் இருக்கும் சிறிய கிருமிகள் மின்விசிறிகள் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்டு உங்கள் மூக்கிற்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் உங்களுக்கு ஒவ்வாமை, அழற்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
மின்விசிறியை இரவு முழுக்க ஓட வைத்தால் மூக்கு மற்றும் தொண்டை வறண்டு போகும் வாய்ப்புகள். அதிகப்படியான வறட்சியானது சளியின் அதிகப்படியான உற்பத்தியைத் ஏற்படுத்தும். இதனால் சைனசிடிஸ், தலைவலி மற்றும் மூக்கு அடைக்கப்படுகிறது.
வறட்சியைப் போக்க, நீங்கள் சிறிது தண்ணீர் குடிக்கலாம், ஆனால் மீண்டும் மீண்டும் குடிப்பதால் தூக்கம் தடைபடுகிறது. அதேபோல் பகலில் முழுக்க முழுக்க ஃபேனை ஓட வைத்தால் அதனால் கடுமையான சூடு அறையில் தங்கும். இரவில் இதனால் அரை சூடாக இருக்கும்.
பகலில் இதனால் ஃபேனை தவிர்த்து இயற்கையான காற்றோட்டம் அறைக்குள் வரும்படி கொஞ்சம் பார்த்துக்கொள்ளலாம். வெளியே செல்லும் போது ஜன்னல்களை திறந்து வைத்துவிட்டு சென்றால் காற்றோட்டம் அதிகரித்து அறையில் சூடு குறையும். இதன் காரணமாக திரும்பி வந்து ஃபேனை போட்டால் அதனால் சூடு அதிகம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.
வேறு என்ன பிரச்சனைகள் ஏற்படும்: இரவு முழுக்க நீங்கள் மின்விசிறிக்கு அருகில் தூங்கினால், மின்விசிறியின் காற்று உங்கள் கண்களை உலர்த்தும். நீங்கள் தூங்கும்போது உங்கள் கண்கள் சிறிது மற்றும் எப்போதாவது திறக்கலாம், மேலும் காற்று ஓட்டம் அவற்றை வறண்டு போக வைக்கலாம். இதனால் நீங்கள் உலர்ந்த கண்களுடன் எழுந்திருக்க நேரிடும்.
தொடர்ந்து காற்று வீசுவது வறண்ட சருமத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தலாம். இரவு நேர "ஸ்கின் ரோட்டினின்" ஒரு பகுதியாக படுக்கை நேரத்தில் மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துவது ஓரளவுக்கு பிரச்சனையை சமாளிக்கலாம். அரிப்பு அல்லது வறண்ட கண்களைப் போக்க மருத்துவர்கள் பரிந்துரைத்த கண் சொட்டுகள் எரிச்சலைக் குறைக்கும்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications