திமுகவுக்கு செக்?.. "வழி"க்கு கொண்டுவர பாஜகவின் "திட்டம்".. ஆளுநர் மாற்றப்படுவாரா.. புது நெருக்கடி
திமுகவுக்கு நெருக்கடி தர பாஜக யோசித்து வருவதாக கூறப்படுகிறது
சென்னை: திமுக அரசையும் வழிக்கு கொண்டு வரும் பாணியை கையில் எடுத்துள்ளதாம் மத்திய அரசு..! இதற்கு என்ன காரணம்? ஏன்?
மாஜிக்களின் மீதான ஊழல் பட்டியலை திமுக அரசு எடுத்து வருகிறது.. அதை வைத்து, விரைவில் நம்பிக்கை எடுக்க போவதாகவும் தெரிகிறது.
இதனால் கலங்கி போயுள்ள மாஜிக்கள், திமுகவுக்கு சமாதான தூது அனுப்பி வருகின்றனர்.. மேலும் சிலர், வழக்குகளை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

வருமானம்
இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு விஷயம் கசிந்து வருகிறது.. முந்தைய அதிமுக அரசில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அனைத்து அமைச்சர்களின் ஊழல் கோப்புகள், வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் என சேகரித்து , மிக பெரிய கோப்புகளை தயாரித்தது மத்திய அரசு.

ஊழல் லிஸ்ட்
அதை மையப்படுத்தியே தங்களுக்கான காரியங்களை சாதித்தது பாஜக... எடப்பாடி பழனிசாமியும் இதனால் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாக வளைந்து கொடுத்தார்... அதேபோல, இப்போது திமுக அரசையும் வழிக்குக் கொண்டு வர அதே பாணியை ரகசியமாக கையிலெடுக்கிறதாம் மத்திய அரசு.

ஆளுநர்
இதற்கு, இப்போதுள்ள கவர்னர் பன்வாரிலாலிடமே தொடர்ச்சியாக கவனிக்க சொல்லி பொறுப்பை ஒப்படைக்கலாமா ? அல்லது புதிய நபரை நியமிக்கலாமா? என்று பிரதமர் அலுவலகம் ஆலோசிப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன... அதேசமயம், திமுக அரசை கண்காணிக்க பன்வாரிலாலால் முடியுமா? என்று பிரதமரிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பு கேட்டதாகவும் ஒரு தகவல் டெல்லியிலிருந்து கிடைக்கிறது.

எதிர்பார்ப்பு
பிரதமர் மோடியின் எதிர்பார்ப்புகளுக்கு திமுக தலைமை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் இன்னும் ஒரு வருடத்துக்கு கவர்னர் மாற்றப்பட மாட்டார். ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் தமிழகத்துக்கு புது கவர்னர் நியமிக்கப்படுவார். அப்படி நியமிக்கப்பட்டால், அந்த புது கவர்னரின் கண்காணிப்பில் திமுக அரசு பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications