111 கி.மீ வேகத்தில் வீசிய காற்று.. சுழன்றடித்து கரையை கடந்த தீவிர புயல் கஜா!
Recommended Video

சென்னை: கஜா புயல் இன்று அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது.
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான கஜா, நான்கு நாட்களாக மெல்ல, மெல்ல நகர்ந்து வந்து, இன்று அதிகாலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது.

அப்போது அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 111 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் தான் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை வரையில் தொடர்ந்து சொல்லி வந்தது.
நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், இந்த புயல் தீவிர புயலாக வருவதன் காரணமாக 110 கிலோமீட்டர் வரையில் காற்று வீசும் என்று எச்சரித்தார். சில இடங்களில் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்றார்.

இந்த நிலையில்தான் 111 கிலோ மீட்டர் வேகத்தில் உச்சபட்ச காற்று வேகம் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக காரைக்காலில் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது கண்டறியப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால்தான் மின் கம்பங்கள், மரங்கள் அதிக அளவில் சாய்ந்து சேதம் அதிகமாக உள்ளது. இருப்பினும், வர்தா புயலுடன் ஒப்பிட்டால் இந்த காற்றின் வேகம் குறைவு தான். வர்தா புயல் சென்னையைத் தாக்கியபோது மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications