சென்னையில் இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் கொரோனா மரணம் கிடுகிடு உயர்வு
சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 42 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக ராணிப்பேட்டையில் 12 பேரும், சேலத்தில் 10 பேரும் பலியாகி உள்ளனர்.
வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 113 பேர் மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். சென்னையில் புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவிற்கு உயிரிழப்பு அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 42 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 14,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்த்தில் புதிய உச்சமாக நேற்று 18692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1166756 ஆக உயர்ந்தத. இன்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இன்று காலைநிலவரப்படி தமிழகத்தில் 115128 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ராணிப்பேட்டை
மொத்தம் உள்ள 37 மாநிலங்களில் 35 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 100க்கும் மேல் உள்ளது. நேற்று 27 மாவட்டங்களில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது. சென்னைக்க அடுத்தபடியாக ராணிப்பேட்டையில் 12 பேரும், சேலத்தில் 10 பேரும் பலியாகி உள்ளனர்.

செங்கல்பட்டு கோவை
சென்னை தான் தமிழகத்தின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 5473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் நேற்று 31222 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கோவையில் 1113 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

எங்கு அதிகம்
சென்னைக்குப் பிறகு, செங்கல்பட்டு (8,087), திருவள்ளூர் (5,564), கோயம்புத்தூர் (6,943), மதுரை (4,207) மற்றும் காஞ்சிபுரம் (3,008) ஆகிய இடங்களில் அதிக அளவில் கொரோனா நோயாளிகள் உள்ளனர். சென்னையும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பேட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் சேர்த்து 8,038 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இப்போது 47,881 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளில் கிட்டத்தட்ட 41% ஆகும்,

மேற்கு மாவட்டங்கள்
மீதமுள்ள வடக்கு மாவட்டங்களில் 1,886 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். . சென்னை உட்பட மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் 59,845 பேர் இப்போது தொற்றுநோய்க்காக சிகிச்சை பெறுகிறார்கள். மேற்கு மாவட்டங்களிலும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications