நடிகை சித்ரா மரணம் தற்கொலையும் அல்ல.. கொலையும் அல்ல.. நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்
சென்னை: நடிகை சித்ராவின் மரணம் தற்கொலையும் அல்ல, கொலையும் அல்ல என பெண் ஜோதிடர் ஜெயஸ்ரீ என்பவர் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் புகழ் பெற்றவர் நடிகை சித்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி கலந்து கொண்டார்.
அவர் சூட்டிங் செல்ல வசதியாக நசரத்பேட்டையில் உள்ள பிளசண்ட் டேஸ் என்ற ஹோட்டலில் கணவர் ஹேமந்துடன் தங்கியிருந்தார். அவர் கடந்த 9-ஆம் தேதி 2.30 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொலை
இந்த நிலையில் அவரது மரணம் கொலை என சித்ராவின் தாய் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் என்பது உறுதியானது. அது போல் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மாதமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
பெண் ஜோதிடர்
இந்த விசாரணையில் சித்ராவுடன் நடித்த நடிகர், நடிகைகள், அக்கம்பக்கத்தார், நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சந்தேகம் என்ற பெயரில் கணவர் கொடுத்த மன உளைச்சல் காரணமாக சித்ரா உயிரிழந்துவிட்டார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது இறப்பு குறித்து ஒரு பெண் ஜோதிடர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
திறமை
பெண் ஜோதிடர் ஜெயஸ்ரீ பாலன் கூறுகையில் சித்ரா மே மாதம் 2-ஆம் தேதி 1992-ஆம் ஆண்டு பிறந்தார். அவரது ஜாதக கணிப்பின்படி அவர் மாலை 5.15 மணிக்கு பிறந்துள்ளார். அவர் இயல்பிலேயே திறமையானவராகவும், துணிச்சல் மிக்கவராகவும் இருந்திருப்பார். இவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டை ஹேமந்த் அபகரிக்க திட்டமிடுவதாக சித்ராவின் தாய் குற்றம்சாட்டியிருந்தார்.
தற்கொலை
சித்ராவின் மரணம் தற்கொலையும் அல்ல கொலையும் அல்ல என்கிறார் பெண் ஜோதிடர் ஜெயஸ்ரீ பாலன். இந்த வீடு தொடர்பாக கணவரை எப்படியாவது பயமுறுத்த வேண்டும் என சித்ரா நினைத்தே தூக்கில் தொங்குவது போல் முடிவு செய்திருக்கிறார். ஆனால் விளையாட்டு விபரீதமாக முடிந்துவிட்டது.
கணவரை பயமுறுத்த
எனவே அவர் விளையாட்டாக கணவரை பயமுறுத்த செய்ததே இது போன்று உயிரை பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கு கணவர் ஹேமந்த் காரணமாக இருக்க முடியாது என கூறியுள்ளார். இது போன்று பல்வேறு தரப்பினர் அளித்து வரும் காரணங்களால் அனைவரும் குழம்பி போய் உள்ளார்கள்.