"மாதம் ரூ.1.7 லட்சம் சம்பளம்.." ஆனாலும் செலவுகளை சமாளிக்க முடியவில்லையாம்.. புலம்பி தள்ளும் இளம்பெண்
சென்னை: பெண் ஒருவர் மாதம் ரூ.1.7 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம். ஆனாலும், தன்னால் எந்தவொரு செலவையும் செய்ய முடியவில்லை என்றும் பெரும் நிதி நெருக்கடியில் இருப்பது போல உணர்வதாகச் சொல்லியிருக்கிறார். மேலும் தனக்காக ஒரு பொருளை வாங்கும்போது கூட குற்ற உணர்ச்சி ஏற்படுவதாக இணையத்தில் புலம்பித் தள்ளி இருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் பலரும் கை நிறையச் சம்பாதிக்கிறார்கள். ஆனாலும், கூட சம்பளம் போதவில்லை என அவர்கள் சொல்வகை நாம் பார்த்திருப்போம். குறிப்பாகப் பெருநகரங்களில் வாழ்வோர் எவ்வளவு சம்பாதித்தாலும் பற்றவில்லை என்று சொல்வதை நாம் கேட்டிருப்போம்.

ரூ.1.7 லட்சம் சம்பளம்
அப்படிப் பெண் ஒருவர் பதிவிட்டுள்ள போஸ்ட் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 27 வயதான அந்தப் பெண்ணுக்கு மாதம் ரூ.1.7 லட்சம் சம்பளம் வருகிறதாம். இருந்தாலும் கூட அந்தத் தொகை பத்தவில்லை என்றும் தான் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும் அந்தப் பெண் ரெடிட் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதுவே இப்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
அந்தப் பெண் தனது பதிவில், "மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதித்தும் நான் பெரும் சுமையாக உணர்கிறேன். சிப் முதலீடுகள், மாதச் செலவுகள் மற்றும் கல்விக் கடன் தவணைகளை எல்லாம் கட்டிய பிறகு என்னிடம் எதுவும் மிஞ்சுவதில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வளவு செலவு இருப்பதால் தனக்காகக் கொஞ்சப் பணம் செலவு செய்தாலும் அதில் குற்ற உணர்வு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தனது பழைய போன் பழுதாகிவிட்டதால், புதிய போன் வாங்க வேண்டியுள்ளதாகவும், ஆனால் அதைக்கூட வாங்க முடியாமல் திணறுவதாகவும் கூறியிருந்தார்.
நண்பர்களைக் கூட சந்திக்க முடியல
அவர் மேலும் கூறுகையில் "என்னால் இப்போது செல்போனை வாங்க முடியாது. அப்படி வாங்கினால் நான் எனது சேமிப்பை ஏமாற்றுவது போல் உணர்கிறேன். ஏதாவது தவறு நடந்தால் என்ன செய்வது என்று பயமாக இருக்கிறது. கூடுதல் பணம் செலவழித்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இதற்காகவே நண்பர்களுடன் வெளியில் செல்வதையும், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதையும் கூட தவிர்க்கிறேன். அப்படியே வேறு வழியில்லாமல் உணவு ஆர்டர் செய்ய வேண்டி வந்தாலும் ₹200-க்குள் மலிவான ஒன்றையே தேர்வு செய்வேன்" என்று பதிவிட்டுள்ளார்.
செலவுகள்
அவரது வருமானத்தில் கணிசமான பகுதியாக ₹30,000 கல்விக் கடன் இஎம்ஐ-க்காக போய்விடுகிறதாம். ₹50,000 முதல் ₹60,000 வரை பல்வேறு திட்டங்களில் சிப் முதலீடு செய்கிறார். வேலைக்குச் சென்று வர மாதந்தோறும் ₹20,000 செலவாகிறது. வீட்டு வேலை செய்பவருக்கு ₹5,000, தனிப்பட்ட தேவைகளுக்கு ₹5,000 செலவு ஆவதாக அவர் குறிப்பிடுகிறார். கூடுதலாக, கடந்த நான்கு மாதங்களாக, அம்மாவிடம் பெற்ற தொகையைத் திரும்பச் செலுத்த மாதம் ₹20,000 செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
நெட்டிசன்கள்
அவர் மேலும் தனது பதிவில், "நாள் முழுவதும் வேலை செய்த பிறகும் எனக்காகச் செலவழிக்க முடியாத இந்த வாழ்க்கையை நான் வெறுக்கிறேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. நம்பிக்கையற்ற உணர்வு மெல்ல அதிகரித்து வருகிறது" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு நபர், "உங்களுக்காகச் செலவழிக்க முடியாவிட்டால் சம்பாதிப்பதில் என்ன பயன்? வாழ்க்கை ஒரு முறை தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.. சமநிலைதான் இங்கே முக்கியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு நபர், "குற்ற உணர்வு இல்லாமல் உங்களுக்காகச் செலவழிக்க ₹10,000 முதல் ₹20,000 வரை ஒதுக்கி வையுங்கள். உங்கள் சம்பளம் ₹1.5 லட்சம் என்று நினைத்துக்கொண்டு மீதியைத் திட்டமிடுங்கள். உங்களுக்குக் கடன் இருந்தால், இஎம்ஐ தொகையைப் போல் 6 முதல் 10 மடங்கு அவசரக்கால நிதியாக வைத்துக்கொள்ளுங்கள்" என்று யோசனை வழங்கினார்.
-
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications