அதெல்லாம் 5 ஆண்டுக்கு முன்பே முடிஞ்சிடுச்சி.. அடுத்த 10வது நிமிடத்தில் கள்ளக்காதலனுடன் சென்ற பெண்
சென்னை: போலீஸ்காரருடன் உறவு முறிந்துவிட்டதாக கூறிய பெண் கணவர் கண் முன்னால் அவருடன் பைக்கில் உட்கார்ந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் முத்தியால்பேட்டை காவல் நிலையம் எதிரே தனியார் கூரியர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாவதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கல்லூரி படிக்கும் வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

காவல் நிலையம்
அந்த தனது மனைவி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்தார். தகாத உறவின் போது எடுக்கப்பட்ட தனது மனைவியின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை வைத்து பெஞ்சமின் 20 லட்சம் கேட்டு மிரட்டுகிறார்.

கொலை மிரட்டல் விடுத்த கணவர்
மேலும் கொலை மிரட்டலும் விடுக்கிறார் என ஜெயபிரகாஷ் புகார் அளித்தார். தனது மனைவி தகாத உறவில் இருந்தது எனக்கு தெரியாது. கடந்த ஜூன் மாதம் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பின்னரே தனக்கு அனைத்து விஷயங்களும் தெரியவந்தது என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

அவதூறு
இந்த நிலையில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ரூபாவதி கணவர் ஜெயபிரகாஷ் மீது பரபரப்பான புகாரை அளித்தார். அதில் குடிக்காரரான ஜெயப்பிரகாஷ் தன்னை தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததாகவும் வீட்டை அபகரிப்பதற்காகவே இதுபோன்ற அவதூறான தகவல்களை பரப்பி வருவதாகவும் ரூபாவதி கூறினார்.

5 ஆண்டுகள்
மேலும் பெஞ்சமின் தனக்கு நெருங்கிய நண்பர். அவருடன் இருந்த உறவு 5 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து போன விஷயம் என கூறினார் ரூபாவதி. இந்த நிலையில் புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த ரூபாவதி, காவலர் பிராங்க்ளினுடன் பைக்கில் பறந்து விட்டார். கொஞ்ச நேரத்திற்கு முன்னர் உறவு முறிந்துவிட்டதாக கூறிய ரூபாவதி அந்த காவலருடன் சென்றுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications