கோயம்பேட்டில் பயங்கரம்.. பெண் அதிகாரிக்கு கத்திக்குத்து... போதையில் இருந்த கணவரின் வெறிச்செயல்
மனைவியை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்
சென்னை: சுங்கத் துறை பெண் துணை ஆணையரை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
பெண்கள் என்னதான் படித்து உயர் பதவியில் அமர்ந்தாலும் சமூகத்தில் அவர்கள் மதிப்பு ஏனோ சாதாரண கடை நிலைதான்...

ஆணாதிக்க சிந்தனை பல்வேறு வடிவங்களில் இன்றும் இருக்கத்தான் செய்கிறது... கூலி வேலை செய்யும் பெண் தொழிலாளிகள் ஆனாலும் சரி, சமூகத்தில் உயர்ந்த பணிகளில் இருக்கும் பெண்கள் ஆனாலும் சரி, இந்த அவல பரவி உள்ளது.
படித்த பட்டதாரி பெண்கள் என்றும் பாராமல், அவர்களுக்கும் "சுயமரியாதை" உள்ளது என்ற பொதுஅறிவு கூட இல்லாமல், உணர்வுகள் அனைவருக்குமே பொதுப்படையானது என்ற அடிப்படை புத்தி கூட இல்லாமல், தங்கள் காலில் போட்டு மிதிக்கும் ஆண்களின் மறைமுக மற்றும் நேரடி அராஜகங்கள் எல்லை மீறி கொண்டிருக்கின்றன..
அவ்வளவு ஏன், பெண்கள் அறிவாகவும் துணிவாகவும் திறமைசாலிகளாவும் இருப்பதை, சில ஆண்களால் கொஞ்சம்கூட ஜீரணிக்கவும் முடிவதில்லை... தாங்கி கொள்ளவும் முடிவதில்லை.. தங்கள் இயலாமையின் வெளிப்பாடுகளை பல ரூபங்களில் தாங்களே வெளிப்படுத்தியும் கொள்கிறார்கள்.. தங்கள் குணம் இதுதான் என்று அவர்களே வெளிச்சம் போட்டு காட்டியும் கொள்கிறார்கள்.. இதுதான் சமூக பேத வன்முறைகளுக்கு அடித்தளமாகிறது.
சாதாரண பட்டப்படிப்பை முடித்து வெளியேறுவதற்கே பெண்கள் போராடும் நிலை உள்ளது. அதிலும் ஐஆர்எஸ் எனும் அரசின் சிவில் தேர்வில் வென்று அதிகாரியாக அமர்ந்த பெண் ஒருவர் அவர் என்னதான் அதிகாரியாக இருந்தாலும் மனைவி என்கிற பார்வையில் கணவனால் தாக்கப்பட்ட சமபவம் சென்னையில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் வருமான வரித்துறையில் உயர் அந்தஸ்த்தில் உள்ளவரும் ஆவார்.. அவரை பற்றின செய்திதான் இது.
சென்னை கோயம்பேட்டில் கேம்ஸ் வில்லேஜில் விமான நிலையத்தில் சுங்கத் துறை துணை ஆணையர் சர்மிளா பணியாறறி வருகிறார்.. இவருக்கு 32 வயது.. ஐஆர்எஸ் தேர்ச்சி பெற்றவர். இவரது கணவர் செல்வமுத்துக்குமார்.. 36 வயதாகிறது. சிறுசேரியில் டிசிஎஸ் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்...
நேற்று இரவு இருவரும் காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.. கணவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது... வீட்டின் அருகே வந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி உள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கணவர், காரில் இருந்த கத்தியை எடுத்து, மனைவியை தாக்கி உள்ளார்.. இதில், ஷர்மிளாவின் இரண்டு கை, கால், தொடை, மார்பு பகுதிகளில் கத்தி குத்து காயங்கள் ஏற்பட்டன.
படுகாயமடைந்த சுங்கத்துறை துணை ஆணையர் ஷர்மிளாவை, அங்கிருந்தோர் மீட்டு வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. மது போதையில் கணவர் செல்வ முத்துக்குமாரை கைதுசெய்துள்ள கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
இந்த தம்பதிக்கு 6 மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.. மதுரையில் நடைபெறும் திருமணத்துக்கு செல்வது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கத்திக்குத்து நடந்ததாக கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications