சென்னை புறநகர் பஸ் நிலையத்தில் இளம் பெண் செய்த அதிர்ச்சி காரியம்!
Recommended Video

சென்னை: சென்னை மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் கழிப்பறையில் இளம் பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் நெல்லூர், பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் கீதா மாதுரி ( 20 ). இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கீதா மாதுரிக்கு உடல் நிலை சரியில்லாததால் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது பெற்றோர் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

சிகிச்சை முடிந்து உடல் நிலை சரியானதால் மருத்துவமனையில் இருந்து கீதா மாதுரியை, அவரின் பெற்றோர் தங்களது சொந்த ஊருக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். ஆந்திரா செல்வதற்கு குடும்பத்துடன் மாதவரத்தில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்திற்கு நேற்று மாலை நேரத்தில் வந்துள்ளனர். கீதாமாதுரி பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளார்.
வெகு நேரம் ஆகியும் தங்களது மகள் வெளியே வரவில்லை என பெற்றோர்கள் பேருந்து நிலையம் முழுவதும் தேடி வந்த நிலையில், கீதா கையில் பிளேடால் அறுத்து கொண்டு கழிப்பறை முன்பு மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார்.
கீதா மாதுரி ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு பெற்றோர்கள் அலறியடித்து, உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இத்தகவல் மாதவரம் காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்டதன் பேரில் மாதவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications