''நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட்'' சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்... வரதட்சணை ஒழிப்பு நாடகம் அரங்கேற்றம்!
சென்னை: தேசிய பெண்கள் அமைப்பான ''நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்'' சார்பில் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் வரதட்சணையை ஒழிக்கும் பொருட்டு வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
கல்வியில் சிறந்து விளங்க கல்லூரி மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் சிறப்பான முறையில் களப்பணி ஆற்றிய நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் உறுப்பினர் ரிஹானாவிற்கு பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது

மகளிர் தினம் கொண்டாட்டாட்டம்
தேசிய பெண்கள் அமைப்பான ''நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்'' சார்பில் சென்னை திருவல்லிக்கேணி புதூர் முஸ்லிம் வெல்ஃபேர் சொசைட்டி மஹாலில் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்சென்னை மாவட்ட தலைவி ராபியத்துல் பசரியா தலைமை தாங்கினார். மாவட்ட பேச்சாளர் டாக்டர் யாஸ்மின் வரவேற்றார்.

சிறப்புரையாற்றினார்கள்
மாவட்ட செயலாளர் சயீதா பீனா, கென்ரிச் சர்வதேச பள்ளி துணை முதல்வர் பாத்திமா கான், கேம்பஸ் ஃப்ரண்ட் சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஜைனப் அல் ஹதீஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூருல் ஹிக்மா பள்ளி முதல்வர் சுபைதா பீவி, பாப்புலர் ஃப்ரண்ட் தென்சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் சாதிக், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் காமிலா அஷ்ரஃப் ஆலிமா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கல்லூரி மாணவிக்கு உதவித்தொகை
இந்த நிகழ்ச்சியில் வரதட்சணையை ஒழிக்கும் பொருட்டு வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. மேலும் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக பதிலளித்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்க கல்லூரி மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

கொரோனாவில் களப்பணி ஆற்றியவருக்கு பரிசு
கொரோனா காலகட்டத்தில் சிறப்பான முறையில் களப்பணி ஆற்றிய நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் உறுப்பினர் ரிஹானாவிற்கு பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஹ்மத் மலிகா நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.















Click it and Unblock the Notifications