World's Costly Rice: உலகிலேயே விலை அதிகம் உள்ள அரிசி எது தெரியுமா? ஒரு கிலோ ரூ.12,577
டெல்லி: உலகிலேயே மிகவும் விலை மதிப்புள்ள அரிசி எங்கிருக்கிறது தெரியுமா? அது ஒரு கிலோ 12,577 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த அரிசி ஏன் இத்தனை விலைக்கு விற்கப்படுகிறது? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

உலகளவில் பல்வேறு அரிசி வகைகள் உள்ளன. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நெற்களஞ்சியம் தஞ்சாவூராகும். டெல்டா மாவட்டத்தில் ஏராளமான அரிசி வகைகள் கிடைக்கும்.
பச்சை அரிசி, பொன்னி, பொன்னி புழுங்கல் அரிசி, பாசுமதி அரிசி, சீரகசம்பா, கிச்சலி சம்பா, தூயமல்லி, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார் அரிசி, மூங்கில் அரிசி, கைகுத்தல் அரிசி, காட்டுயாணம், கருடன் சம்பா, குடவாழை உள்ளிட்ட ஏராளமான அரிசி வகைகள் உள்ளன.
பாரம்பரிய நெல் விதைகள் ஏராளமானவை உள்ளன. மேற்கண்டவை மொத்தம் இருக்கும் அரிசி வகைகளில் மிகவும் குறைவான எண்ணிக்கையாகும். அது போல் ஊருக்கு ஊர் ஒவ்வொரு அரிசி ரகம் இருக்கிறது.
ஆந்திராவில் ஒன்று, கேரளாவில் குண்டு அரிசி, சிவப்பு அரிசி, மட்ட அரிசி, கர்நாடகாவில் ஒரு வகையான அரிசி என உண்டு. அந்த வகையில் ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு வகை அரிசி, உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த அரிசியாக இருக்கிறது. இந்த அரிசி வெறும் அதிகவிலைக்கு மட்டுமின்றி அதன் பல்வேறு சிறப்பு அம்சங்களுக்காகவும் பரவலாக கவனிக்கப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் உள்ள டேயோ எனும் அரிசி நிறுவனம் கின்மேமை எனும் அரிசி வகையை தயாரிக்கிறது. இந்த அரிசிதான், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு அந்த நிறுவனம் காப்புரிமையும் பெற்றுள்ளது.
மிக முக்கியமாக இந்த அரிசி அதன் தரத்திற்காக மிகவும் பிரபலமடைந்துள்ளது. அது போல் இந்த கின்மேமை அரிசியில் அதிகளவு ஊட்டச்சத்தும் இருப்பதால் மிகவும் கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்த கின்மேமை அரிசி சாதாரண அரிசியை விட 1.8 மடங்கு அதிக நார்ச்சத்து கொண்டது. 7 மடங்கு வைட்டமின் பி1 சத்து இருக்கிறது. இதனால்தான் இந்த அரிசியை உடல் நலத்தில் அக்கறை கொண்டவர்கள் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
மேலும் இந்த அரிசியில் எந்த கலப்படமும் இல்லை என்கிறார்கள். இந்த அரிசி ஒரு கிலோ ரூ 12,577 ஆக உள்ளது. இந்த அரிசி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. கின்மேமை அரிசி என்பது ஒரே ஒரு வகை அல்ல. இது ஜப்பான் முழுவதும் பயிடப்படும் குன்மா, கிஃபூ, குமாமோட்டோ, நாகானோ, நிகாட்டா ஆகியவைகளின் கலவை என்கிறார்கள்.
இந்த அரிசியை கழுவாமலேயே பயன்படுத்தும் அளவுக்கு சுத்தமான ஒரு அரிசியாகும். அரிசியை கழுவுவதால் தண்ணீர் வீணாகிறது. அதை தடுக்கவே ஏற்கெனவே கழுவப்பட்டு இந்த அரிசி விற்பனை செய்யப்படுகிறது. எனவே வாங்கி வந்ததும் அப்படியே தூக்கி குக்கரிலோ அல்லது பாத்திரத்திலோ போட்டு சமைக்கலாம். இதில் அமினோ அமிலங்கள், ஊட்டச்சத்துகள், வைட்டமின் பி ஆகியவை அதிகமாக இருக்கின்றன.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications