15 வயது சிறுமி.. இன்ஸ்டாகிராமில் போலி ஐடி மூலம் ஆபாச பதிவு போட்ட இளைஞர்.. போக்சோவில் கைது
15 வயது சிறுமியை ஏமாற்றிய இளைஞர் போக்சோவில் கைதானார்
சென்னை: இன்ஸ்டாகிராமில் 15 வயது சிறுமியின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி ஐடி தொடங்கிய நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த பெண் அவர்.. கணவனை இழந்தவர்.. இவருக்கு 2 பெண்கள் உண்டு.. 2 மகள்களையும் வீட்டு வேலை செய்து படிக்க வைத்து வருகிறார்.
இதில் ஒரு மகளுக்கு 15 வயதாகிறது.. அவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து போலியாக ஐடி கணக்கை சிலர் துவங்கி உள்ளார்.. மேலும் அந்த பெண்ணை பற்றி அவதூறு செயல்களிலும் அந்த மர்ம நபர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

தாய்
இந்த விஷயம் தெரிந்ததும், அதிர்ச்சியடைந்த தாய், தண்டையார்பேட்டை மகளிர் போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டை போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு, மர்மநபர்கள் குறித்த விவரங்களை தேடி வந்தனர்.. இறுதியில், மணலிபுதுநகர் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்ற வாலிபர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது..

சிறை
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.. அத்துடன், போக்சோ சட்டத்தில் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலும் அடைத்தனர். பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தந்தால் மட்டும் போக்சோ சட்டம் பாய்வதில்லை.. இதுபோன்ற கிரிமினல் வேலைகளை செய்து அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினாலும் போக்சோ சட்டம் பாயும் என்பதுதான் மேற்கண்ட வழக்கு தெரியப்படுத்துகிறது..

டெல்லி
இப்படித்தான், கடந்த வாரம்கூட, டெல்லியில் ஒரு சம்பவம் நடந்தது.. ஒரு பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இளைஞர் ஒருவர் ஹேக் செய்துவிட்டு, போலியாக உருவாக்கப்பட்ட ஐடியில் பெண்ணின் நிர்வாணப் படங்களை வெளியிட போவதாக மிரட்டி உள்ளார்.. அந்த மிரட்டல் விடுத்த மெசேஜ் போலீசில் தெரிவித்துள்ளார் சம்பந்தப்பட்ட பெண்.. இறுதியில் அந்த இளைஞர் ஒரே நாளில் கைதாகினார்..

இளம்பெண்கள்
பெண்களுக்கு சட்டம் சாதகமாக இருந்தாலும்கூட, சமீபகாலமாக, சோஷியல் மீடியாவில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்ற நிலைமை வந்துவிட்டது.. ஒரு ஆப் இருக்கிறதென்றால், அதில் ஒரு கணக்கு தொடங்குபவர், தன்னுடைய கணக்கு மட்டுமல்லாமல் தனது பெயர்களை மாற்றி, பாலினத்தையும் மாற்றி, வேறு ஒரு போலியான கணக்குகளையும் தொடங்கி, அதன் மூலம் பல்வேறு ஏமாற்று காரியங்களையும் செய்து வருவது பெருகி கொண்டிருப்பதால், இளம்பெண்கள் உஷாராக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications