Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலம் வாங்கித் தருவதாக ரூ 1.89 கோடி பண மோசடி.. பசங்க இயக்குநர் பாண்டிராஜ் புகார்.. இளைஞர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலம் வாங்கி தருவதாக கூறி இயக்குநர் பாண்டிராஜிடம் ரூ 1.89 கோடி பணத்தை பெற்ற இளைஞர் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் இயக்குநராக முதல்முறையாக அறியப்பட்டவர் பாண்டிராஜ். அவரது முதல் படத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன. அருள்நிதியின் வம்சம் படத்தை இயக்கியுள்ளார்.

Youth arrested for cheating Rs 1.89 crore from Director Pandiraj in Pudukottai

அது போல் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். பாண்டிராஜ் தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

இவர் தன்னிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி குமார் என்பவர் ரூ 1.89 கோடி மோசடி செய்துள்ளதாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் ஒரு மனுவை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்தவர் குமார். இவருக்கு வெள்ளனூர் கிராமத்தில் உள்ள 1 ஏக்கர் 43 சென்ட் பரப்பளவில் நிலம் உள்ளது.

அந்த நிலத்தில் 27 சென்ட் நிலத்தை எனக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு விற்பனை செய்வதாக தெரிவித்தார். இதற்காக முதலில் ரூ 40 லட்சத்தை பெற்றார். பின்னர் அதே பட்டா எண் கொண்ட நிலத்தின் மற்றொரு பகுதியில் இருந்து 54 சென்ட் நிலத்தையும் தன்னிடம் விற்பனை செய்வதாக தெரிவித்தார். அதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு 12 லட்சம் ரூபாய் முன் தொகை கொடுத்தேன். ஆனால் அந்த 2 நிலங்களையும் எனது பெயருக்கு அவர் பதிவு செய்து தரவில்லை.

கடந்த 2017 ஆம் ஆண்டு வீட்டு வேலைக்காக குமார், என்னிடம் 3 லட்சம் கடன வாங்கியிருந்தார். இதையடுத்து காரைக்குடியில் துணிக் கடை ஆரம்பிக்க வேண்டும் என கூறி 4.50 லட்சம் பணத்தையும் வாங்கினார். அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 39 ஆவது வார்டில் 69,840 சதுர அடி கொண்ட வீட்டு மனை பட்டா அவரிடம் இருப்பதாக தெரிவித்தார்.

அதை எனக்கு எழுதி தருவதாக கூறினார். இதற்காக இரு தவணைகளாக ஒரு கோடி ரூபாய் பெற்றுள்ளார். இதே போல் 5 தவணைகளாக என்னிடம் நிலம் விற்பனை செய்வதாக குமார் மொத்தம் ரூ 1 கோடி 89 லட்சத்து 59 ஆயிரம் பெற்றுக் கொண்டு நிலத்தை எனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்யாமல் மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+