நீச்சல் குளம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை.. இளைஞர் மடக்கிப்பிடித்து கைது.. சென்னை போலீஸ் அதிரடி
சென்னை: சென்னை முகப்பேரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டு ரூ.3.75 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் டால்பின் நீச்சல் குளம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து போதை தடுப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.

அப்பொழுது மஞ்சள் நிற டியோ இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலிசார், அவரை சுற்றி வளைத்து சோதனை செய்த பொழுது அவரிடம் எல்எஸ்டி போதை ஸ்டாம்ப் மற்றும் போதை மாத்திரைகள் இருந்தன.

அதனை பறிமுதல் செய்த போலீசார், விசாரணை நடத்தியபோது, போதை மாத்திரைகள் வைத்திருந்தது, திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சரத் (எ) சரவணன் (23) என்பது தெரிய வந்தது.
மேலும், இவர் போதை மாத்திரைகள் சப்ளை செய்கிறாரா இவருக்கு பின்னால் இருக்கும் கும்பல் யார் என்ற தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்னர்.












Click it and Unblock the Notifications