2000 ரூபாய்க்காக பறிபோன உயிர்.. ப்ரீத்தியை தள்ளிவிட்டதை ஒப்புக்கொண்ட குற்றவாளிகள்.. நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் செல்போன் பறிப்பின்போது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். செல்போன் பறிப்பில் ஈடுபட்ட விக்னேஷ், மணிமாறன் ஆகியோரை கைது செய்து விசாரித்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டனர் என்றும், உயிரிழந்த இளம்பெண் ப்ரீத்தியின் செல்போன் ரூ.2000-க்கு விற்கப்பட்டதாக குற்றவாளிகள் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை இந்திரா நகரில் கடந்த ஜூலை 2ஆம் தேதி ப்ரீத்தி என்ற இளம்பெண் மின்சார ரயிலில் பயணம் செய்த போது அவரது செல்போனை இளைஞர்கள் இருவர் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது தனது செல்போனை காப்பாற்றிக் கொள்ளப் போராடிய ப்ரீத்தி, தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ப்ரீத்தி இன்று உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருவான்மியூர் ரயில்வே போலீசார், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பழைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பெயர்களையும் ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ், அடையாரைச் சேர்ந்த மணிமாறன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக ரயில்வே போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். போலீசார் கூறுகையில், கடந்த 2ஆம் தேதி சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்த பெண்ணை பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த பெண்ணின் செல்போன் மாயமானது தெரியவந்தது. பின்னர் அந்த செல்போனை ட்ராக் செய்தபோது ராஜூ என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது செல்போனை 2 ஆயிரம் ரூபாய்க்கு இருவர் அவரிடம் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (27) அடையாரைச் சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவரை பிடித்து விசாரித்தோம். இந்திரா நகர் ஸ்டேஷனில் ரயில் நின்று புறப்படும்போது, ப்ரீத்தி செல்போனை பறித்ததும், அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளியதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ப்ரீத்தியின் செல்போன் ரூ.2000-க்கு விற்கப்பட்டதாக குற்றவாளிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications