ஆருத்ரா மோசடி வழக்கில் சிறை சென்றவர் கடத்தல்- சில மணி நேரங்களில் 7 பேரை கைது செய்த போலீஸ்
சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் சிறை சென்றவர் கடத்தப்பட்டதாக அவரது தாய் கோயம்பேடு போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் கோயம்பேடு போலீஸார் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இங்கு ஒரு லட்சம் பேர் தங்கள் பணத்தை முதலீடு செய்தனர். அப்படி முதலீடு செய்த ரூ 2,438 கோடி பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன் பேரில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உள்பட 21 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வழக்கில் நடிகர் ரூசோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகர் ஆர்.கே.சுரேஷை போலீஸார் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரியலூரை சேர்ந்த செந்தில் குமார், புழல் சிறையில் 97 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது நிபந்தணை ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர் கடந்த 2 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில் அரியலூரிலிருந்து அவருடைய உறவினர் வீட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டு சென்னை வந்தார் செந்தில் குமார். அப்போது கோயம்பேடு சீமாத்தம்மன் நகரில் உள்ள உறவினர் முருகன் வீட்டுக்கு சென்ற போது செந்தில் குமார் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

இது குறித்து அவருடைய தாய் லதா கோயம்பேடு போலீஸில் புகார் அளித்துள்ளார். அது போல் செந்தில்குமாரின் மனைவி சரண்யாவை மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு செந்தில் குமார் தன்னிடம் 15 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். எனவே முதலீட்டாளர் யாராவது அவரை கடத்தினார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து 7 பேரை கைது செய்தனர். செல்வம் (38), பாலாஜி (27), அஜித்குமார் (27), விக்னேஷ் (25), சிவா (21) உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications