சென்னை விமான நிலையத்தில் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபுவின் கார்களை பூட்டிய அதிகாரிகள்! பரபரப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு ஆகியோரின் கார்களுக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கல்லீரல் புற்றுநோய் முற்றிய நிலையில் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்த பவதாரிணி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னை விமான நிலையம் வந்த பவதாரிணியின் உடல் திநகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திநகரில் உள்ல இளையராஜாவின் இல்லத்திற்கு இயக்குநர்கள் வெங்கட் பிரபு, சுதா கொங்குரா, நடிகர் பிரேம் ஜி, பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் வந்திருந்தனர். பவதாரிணியின் இறுதி சடங்கிற்காக அவருடைய உடல் இரவு 10 மணி அளவில் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கையிலிருந்து தனது சகோதரியின் உடலை கொண்டு வர சென்றிருந்த யுவன் சங்கர் ராஜா சென்னை விமான நிலையம் வந்தார். அவர் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல அவருடைய கார் தயார் நிலையில் இருந்தது. அப்போது அவருடைய ஓட்டுநர் காரை எடுக்க முயன்ற போது முடியவில்லை. பிறகு பார்த்தால் அவருடைய காரின் டயர் லாக் செய்யப்பட்டிருந்தது.

அது போல் பவதாரிணியின் உடலை பெற வந்த வெங்கட் பிரபுவின் காரும் லாக் செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக விஐபி பார்க்கிங்கில் வர அதற்கென பாஸ் வாங்க வேண்டும். ஒரு வேளை துக்க நிகழ்வால் அவசரத்தில் இவர்கள் பாஸ் வாங்காமல் விஐபி பார்க்கிங்கில் காரை நிறுத்தியிருந்தனரா என தெரியவில்லை.
இதையடுத்து யுவன் சங்கர் ராஜா தனது சூழலை எடுத்துச் சொன்னதும் அந்த பூட்டு நீக்கப்பட்டது. அது போல் வெங்கட் பிரபுவின் கார் பூட்டும் நீக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கான உண்மையான காரணம் என்னவென தெரியவில்லை.












Click it and Unblock the Notifications