சோமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ பதவி விலகுகிறார்.. இதுதான் காரணமா? சோமேட்டோ புது CEO யார் தெரியுமா?
சென்னை: சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த தீபிந்தர் கோயல், தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.. புதிய மற்றும் அதிக ரிஸ்க் கொண்ட சோதனையான திட்டங்களில் கவனம் செலுத்துவதற்காக தீபிந்தர் கோயல் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமேட்டோ என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில், ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரெண்ட்களில் கிடைக்கும் உணவின் மெனு, விலை விவரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்துகளை ஆன்லைனில் வழங்கும், தளமாகத்தான் இது தொடங்கப்பட்டது.

புகழ்பெற்ற சோமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம்
இதற்கு பிறகுதான் உணவு டெலிவரி, குவிக் காமர்ஸ், ஹோட்டல்களுக்கு நேரடி உணவு பொருள் விநியோகம் மற்றும் டிக்கெட் முன்பதிவு போன்ற பல சேவைகளாக இது விரிவடைந்தது.
2008ம் ஆண்டு தீபிந்தர் கோயல் மற்றும் பங்கஜ் சந்தா ஆகியோர் இணைந்து தொடங்கிய இந்த நிறுவனம், இன்று இடர்னல் (Eternal ) என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. Eternal நிறுவனத்தின் கீழ் Zomato, Blinkit, Hyperpure, District போன்ற முக்கியமான வணிக பிரிவுகள் உள்ளன. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள Eternal, இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
சோமேட்டோ சிஇஓ
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான இந்த சோமேட்டோவின் Eternal நிறுவனத்தின் CEO தீபிந்தர் கோயல் தன்னுடைய பதவியில் இருந்து விலகி உள்ளார்.. அதாவது 2026 பிப்ரவரி 1 முதல் தனது பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தீபிந்தர் கோயல் ராஜினாமாவைத் தொடர்ந்து, அவரது இடத்தில் Blinkit நிறுவனத்தின் CEO ஆக உள்ள அல்பிந்தர் திந்த்சா புதிய CEO ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் நிறுவனத்தின் வளர்ச்சியை ஒருபோதும் பாதிக்காது என்கிறது Eternal நிறுவனம்..
விளக்க கடிதம்
தீபிந்தர் கோயல் தனது ராஜினாமா குறித்து பங்குதாரர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.. அந்த கடிதத்தில் ராஜினாமாவுக்கான காரணத்தையும் விளக்கமாக சொல்லி உள்ளார்..
அதில், "சமீப காலமாக, புதியதும் அதிக ஆபத்து உள்ளதும் ஆன சில யோசனைகள் மீது எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது... அந்த யோசனைகளை செயல்படுத்த பெரிய அளவிலான சோதனைகள் மற்றும் ஆய்வுகள் தேவைப்படும்...
ஆனால் Eternal போன்ற பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனம் என்றால், முதலீட்டாளர்கள் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வகை நிறுவனங்களில், அதிக ஆபத்து உள்ள புதிய முயற்சிகளை செய்வது சரியானது அல்ல ..
அந்த புதிய யோசனைகள் Eternal நிறுவனத்தின் தற்போதைய வணிகம் மற்றும் செயல்பாடுகளுடன் பொருந்தவில்லை.., அதனால்தான், நிறுவனத்தின் நிலையான வளர்ச்சியை பாதிக்காமல் பாதுகாக்க, அந்த முயற்சிகளை நிறுவனத்திற்கு வெளியே இருந்து செய்ய முடிவு எடுத்துள்ளேன்.. இதன் காரணமாகவே, CEO பதவியில் இருந்து விலகுவது தான் நிறுவனத்துக்கும் தன்னுடைய புதிய முயற்சிகளுக்கும் சரியான முடிவு" என்று தன்னுடைய விளக்க கடிதத்தில் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
புதிய சிஇஓ பதவியேற்பு
இதையடுத்து, பிளிங்கிட் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ அல்பிந்தர் சிங் திண்ட்ஸா பிப்ரவரி 1 முதல் எடர்னல் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாகப் பொறுப்பேற்பார் என தெரிகிறது... இதனிடையே, இந்த அறிவிப்புக்குப் பிறகு, Eternal நிறுவனத்தின் பங்கு விலை 4.90 சதவீதம் உயர்ந்து, ரூ.282.80 ஆக முடிவடைந்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 2.57 லட்சம் கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications