Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி கவலையை விடுங்க! ரயிலிலும் விதவிதமாக ஆர்டர் போட்டு சாப்பிடலாம்.. சோமாட்டோவில் புது வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல உணவு விநியோக நிறுவனமான சோமாட்டோ ஐஆர்சிடிசியுடன் கை கோர்த்துள்ளது. 100 ரயில் நிலையங்களில் பயணிகள் ரயிலில் இருந்தபடியே ஆர்டர் செய்ய முடியும் எனவும் சோமாட்டோ டெலிவரி ஊழியர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உணவு டெலிவரி செய்வார்கள் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொலை தூர ரயில்களில் செல்லும் பயணிகள் முதலில் எதிர்கொள்ளும் பிரச்சினை உணவுதான். சில பயணிகள் குடும்பத்துடன் பயணித்தால் வீட்டில் இருந்து சாப்பாட்டை கட்டி எடுத்து சென்று விடுவார்கள். சிலரோ செல்லும் வழியில் தங்களது ஃபேவரைட் ஹோட்டல்களில் உணவை பார்சல் வாங்கி கொண்டு சென்று விடுவார்கள்.

rail zomato irctc

ரயில்களில் கேட்டரிங் வசதி இருந்தாலும் கூட பெரும்பாலான பயணிகள், வீட்டில் இருந்து எடுத்து செல்வதைத்தான் விரும்புவார்கள். சில நேரங்களில் நேரமின்மை காரணமாக உணவு எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது அதேபோல தனியாக செல்பவர்களும் வரும் வழியில் உணவை வாங்கி கொள்ளலாம் என நினைத்துக்கொண்டு பயணத்தை தொடங்கி விடுவார்கள். ரயில்களில் பயணம் செய்யும் போது நினைத்த உணவை எல்லாம் வாங்கி சாப்பிட முடியாத ஒரு நிலைதான் இருந்து வருகிறது.

இதனை போக்கும் விதமாகத்தான் பிரபல உணவு டெலிவரி நிறுவனம் சோமாட்டோ ரயில்வேயுடன் கை கோர்த்துள்ளது. ரயில்களில் இருந்தபடியே ஆர்டர் செய்யும் வசதியை சோமாட்டோ கொண்டு வந்துள்ளது. இந்த வசதி மூலம் பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவை ரயிலில் பயணித்தபடியே ஆர்டர் செய்து கொள்ள முடியும். தற்போது இந்த வசதி 88 நகரங்களில் உள்ளது.

ரயில்வே உணவு கழகம் (ஐஆர்சிடிசி)யுடன் இணைந்து இந்த சேவை தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 10 லட்சத்திற்கு மேற்பட்ட ஆர்டர்களை முடித்துள்ளதாக சோமாட்டோ சிஇஓ ராகேஷ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஐஆர்சிடிசியுடன் இணைந்து உணவு டெலிவரி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சேவை லட்சக்கணக்கான பயணிகளுக்கும் விரிவடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

'Zomato - Food Delivery in Trains என்ற ஆப்ஷன் வழியாக வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்து கொள்ள முடியும். ரயில் நிலையத்தில் இருந்து கொண்டும் ஆர்டர் செய்யலாம். அல்லது ரயிலில் பயணம் செய்யும் போதும் ஆர்டர் செய்யலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் சோமாட்டோ செயலியில் ரயில் என சேர்ச் செய்ய வேண்டும். ரயில்வே ஸ்டேஷனில் இருந்தால் வாடிக்கையாளர்கள் தங்கள் லொகேஷனை அப்டேட் செய்து கொள்ளலாம்.

சென்னையில் புதுசாக விட்ட தாழ்தள பஸ்களை மொத்தமாக மாற்ற எம்டிசி முடிவு.. பயணிகளுக்கு நல்ல செய்தி


அதன்பிறகு பயணிகளின் பி.என்.ஆர் எண் கேட்கும். அதில் அந்த எண்ணை கொடுத்தால் தானாகவே பயணி செல்லும் ரயில் மற்றும் இருக்கை குறித்த விவரங்களை பெற்று விடும். பயணிகள் ஆர்டர் செய்த பிறகு குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் பயணிகள் ஸ்டேஷன்களில் சோமாட்டோ டெலிவரி மேனிடம் ஆர்டரை பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை ரயில் தாமதம் ஆனாலும் கூட சோமாட்டோ ரயில் நேரத்தை டிராக் செய்து டெலிவரியை அதற்கேற்ப சரியான நேரத்தில் வழங்கிவிடும்" என்று தெரிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு சோதனை அடிப்படையில் இந்த சேவையை சோமாட்டோ துவங்கியது. டெல்லி, பிரக்யாராஜ், கான்பூர், லக்னோ, வாரணாசி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்ட இந்த சேவை தற்போது 100 ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சோமாட்டோ தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+